Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கலைஞர் கோட்டம் தமிழ்நாட்டின் அடையாளங்களில் ஒன்றாக மிளிரட்டும்! - உதயநிதி

Webdunia
செவ்வாய், 20 ஜூன் 2023 (21:31 IST)
‘திருவாரூரில் கட்டப்பட்டுள்ள கலைஞர் கோட்டம் தமிழ்நாட்டின் அடையாளங்களில் ஒன்றாக மிளிரட்டும் ‘என்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

திருவாரூரில் கட்டப்பட்டுள்ள கலைஞர் கோட்டத்தை  திறக்க பீகார் முதலமைச்சர் நிதிஷ் குமார் வருகை தர உள்ளார் என்று செய்திகள் நிலையான நிலைகள் உடல்நல குறைவு  காரணமாக திடீரென அவர் தமிழக பயணத்தை ரத்து செய்துவிட்டார்.

இதனை அடுத்து தமிழக முதல்வர் முக. ஸ்டாலின்,  பீகார் மாநில துணை முதல்வர் தேஜஸ்வி முன்னிலையில், இன்று   திட்டமிட்டபடி கலைஞர் கோட்டத்தை திறந்துவைத்தார்.

இதுகுறித்து,  அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தன் டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது:

''வள்ளுவர் கோட்டம் கண்ட முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் நூற்றாண்டையொட்டி, திருவாரூர் மண்ணில் அமைக்கப்பட்டுள்ள கலைஞர் கோட்டத்தை நம் மாண்புமிகு முதலமைச்சர்   முக.ஸ்டாலின் அவர்கள், மாண்புமிகு பீகார் மாநில துணை முதலமைச்சர் சகோதரர் தேஜஸ்வி  அவர்கள் முன்னிலையில் திறந்து வைத்த வரலாற்றுச் சிறப்புமிக்க நிகழ்வில் இன்று பங்கேற்றோம்.

தமிழ்நாட்டு மக்களின் ஏற்றத்துக்காக தன் வாழ்வெல்லாம் உழைத்த கலைஞரின் திருவுருவச்சிலையை கோட்டத்தின் மையத்தில் நம் முதலமைச்சர் அவர்கள் திறந்து வைத்த உணர்வுப்பூர்வமான தருணத்தில், மாண்புமிகு அமைச்சர் பெருமக்கள், கழகத்தாருடன் கலந்து கொண்டதில் பெருமை கொள்கிறோம்.

கலைஞர் கோட்டம் தமிழ்நாட்டின் அடையாளங்களில் ஒன்றாக மிளிரட்டும்!‘’ என்று தெரிவித்துள்ளார்.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

க்ரீத்தி ஷெட்டியின் லேட்டஸ்ட் கார்ஜியஸ் போட்டோஷூட் ஆல்பம்!

பிங்க் நிற உடையில் கூல் லுக்கில் கலக்கும் கௌரி கிஷன்!

இரண்டே நாளில் 100 கோடி ரூபாய் வசூல்.. எம்புரான் படக்குழு அறிவிப்பு!

மனோஜ் பாரதிராஜா மறைவு பற்றி அவதூறு பரப்பாதீர்கள்.. இயக்குனர் பேரரசு ஆதங்கம்!

இரண்டாவது நாளில் சரிந்த மோகன்லாலின் எம்புரான் கலெக்‌ஷன்!

அடுத்த கட்டுரையில்
Show comments