Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

’’’தமிழகத்தை ஆள வா புரட்சி வேங்கையே’’ – சூர்யா ரசிகர்கள் ஒட்டிய போஸ்டரால் பரபரப்பு

’’’தமிழகத்தை ஆள வா புரட்சி வேங்கையே’’ – சூர்யா ரசிகர்கள் ஒட்டிய போஸ்டரால் பரபரப்பு
, வெள்ளி, 4 செப்டம்பர் 2020 (18:09 IST)
தமிழகத்தில் அரசியல் நிலவரம் நாளுக்கு  நாள் பரபரப்பு கூடிக் கொண்டே போகிறது, அடுத்த வருடம் சட்டமன்றத் தேர்தல் ஒருபுறம் ஆளும்கட்சி, எதிர்க்கட்சி ஒருபுறமிருக்க, ரஜினியின் ஆன்மீகம்  அரசியல் விஜய்யின் மக்கள் இயக்கம் என்று அவரவரின் ரசிகர்கள் போஸ்டர் ஒட்டி நடிகர்கள் அரசியலில் கால் பதிக்க வேண்டுமென அழைப்பு விடுக்க, கமல்ஹாசன் தேர்தல் களம் கண்டுள்ளார்,. சீமானும் போராடி  வருகிறார்.

இந்நிலையில் நடிகர் சூர்யாவின் போஸ்டரை ஒட்டி அவரையும் அரசியலுக்கு வருமாறு மதுரையிலுள்ள அவரது ரசிகர்கள் அழைப்பு விடுத்துள்ளனர்.

அதாவது, செப்டம்பர் ஐந்தாம் நாள்,  23 வருடம் ஆகிறது சூர்யா திரையுலகிறு வந்து.  எனவே ரசிகர்கள் ஒட்டியுள்ள போஸ்டரில் திரையுலகை ஆண்டது போதும். தமிழகத்தை ஆள வா புரட்சி வேங்கையே என போஸ்டர் ஒட்டி மேலும் பரபரப்பு கூட்டியுள்ளனர் சூர்யா ரசிகர்கள்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

’’ஐ லவ் யூ ஆல்...’’ மருத்துவமனையில் உள்ளவர்களுக்கு கடிதம் எழுதிய எஸ்.பி.பி