திருவண்ணாமலை மண்சரிவு: அதிர்ச்சி அடைந்த ரஜினிகாந்த்..!

Siva
திங்கள், 9 டிசம்பர் 2024 (09:32 IST)
சமீபத்தில் பெரிதாக கனமழையின் போது திருவண்ணாமலையில் மண் சரிவு காரணமாக வீடு இடிந்து ஏழு பேர் உயிரிழந்த சம்பவம் குறித்து ரஜினிகாந்த் இன்று அதிர்ச்சி அடைந்துள்ளதாக தெரிகிறது.

’கூலி’ படத்தின் படப்பிடிப்பில் கலந்து கொள்வதற்காக ஜெய்ப்பூர் செல்லும் ரஜினிகாந்த் இன்று விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது திருவண்ணாமலை மண் சரிவில் ஏழு பேர் உயிரிழந்தது குறித்து செய்தியாளர்கள் கேட்ட போது ’எப்போ நடந்தது’ என்று கேட்டார். அதற்கு ஃபெஞ்சல் புயலின் போது நடந்தது என்று செய்தியாளர்கள் கூறிய போது ’ஓ மை காட் எக்ஸ்ட்ரீம்லி  சாரி’ என்று பதில் அளித்தார்.

 மேலும் கூலி திரைப்படத்தின் படப்பிடிப்பிற்காக ஜெய்ப்பூர் செல்வதாகவும், படப்பிடிப்பு நன்றாக சென்று கொண்டிருப்பதாகவும் அவர் கூறினார்.

 திருவண்ணாமலை மண்சரிவு ஏற்பட்ட ஏழு பேர் உயிரிழந்த சம்பவம் நடந்து பத்து நாட்கள் ஆன பின்னர் அந்த சம்பவம் குறித்து தெரியாமல் ’எப்போ நடந்தது’ என்று ரஜினிகாந்த் கேட்டிருப்பது சமூக வலைதளங்களில் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.


Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

ஹீரோக்களுக்காகதான் கதை… ஹீரோயின்களுக்கு கவர்ச்சி மட்டும்தான்… ராதிகா ஆப்தே ஆதங்கம்!

நாகார்ஜுனாவின் நூறாவது படத்தில் இந்த ஹீரோயினும் இருக்கிறாரா?

அந்த நடிகர்தான் என் ஃபேவரைட்… அவருடன் இணைந்து நடிக்கவேண்டும்- ருக்மிணி வசந்த் ஆசை!

பிரியங்கா மோகன் நடிக்கும் ‘Made in Korea’... கதைக்களம் பற்றி வெளியான தகவல்!

படிச்சுப் படிச்சு சொன்னேனடா… கண்டீஷன்ஸ ஃபாலோ பண்ணுங்கன்னு – அரசியல் நய்யாண்டியாக கவனம் ஈர்க்கும் ஜீவா பட டீசர்!

அடுத்த கட்டுரையில்
Show comments