Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

வெப் சீரிஸாக உருவாகிறது தமிழ் சினிமாவையே உலுக்கிய கொலை வழக்கு!

வெப் சீரிஸாக உருவாகிறது தமிழ் சினிமாவையே உலுக்கிய கொலை வழக்கு!
, திங்கள், 13 செப்டம்பர் 2021 (10:11 IST)
தமிழ் சினிமாவையே உலுக்கிய முதல் கொலை வழக்கு என்றால் அது லஷ்மிகாந்தன் கொலை வழக்குதான் என்று சொல்லலாம்.

பத்திரிக்கையாளரான லஷ்மிகாந்தன் சினிமா கலைஞர்களின் தனிப்பட்ட வாழ்க்கைப் பற்றிய பல கிசுகிசுக்களை வெளியிட்டு வந்தார். அதில் பல தகவல்கள் அப்பட்டமான பொய் என்று குற்றம் சாட்டப்பட்டன. இந்நிலையில் இவர் மர்மமான முறையில் கொல்லப்பட நிலையில் தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரங்களான தியாகராஜ பாகவதர் மற்றும் என் எஸ் கிருஷ்ணன் ஆகியோர் கைது செய்யப்பட்டு பின்னர் குற்றவாளிகள் இல்லை என நிருபிக்கப்பட்டு விடுதலை செய்யப்பட்டனர்.

ஆனால் கைதுக்கு பின்னர் இருவரும் சினிமா வாழ்க்கை தேய்பிறையாக சென்று முடிந்தது. இந்நிலையில் இப்போது இந்த லஷ்மிகாந்தனின் கொலையை பற்றி தமிழில் ஒரு வெப் சீரிஸ் உருவாக உள்ளதாம். இது சம்மந்தமான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாக உள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

சோனி லிவ்வில் இருந்து விலகிய முன்னணி தயாரிப்பாளர்!