Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

நான் ஏன் நடிப்பதை நிறுத்தினேன் – பாடகி எல் ஆர் ஈஸ்வரி கருத்து!

நான் ஏன் நடிப்பதை நிறுத்தினேன் – பாடகி எல் ஆர் ஈஸ்வரி கருத்து!
, செவ்வாய், 10 நவம்பர் 2020 (17:00 IST)
பழம்பெரும் பாடகியான எல் ஆர் ஈஸ்வரி தான் ஏன் அதிகமாக படங்களில் நடிக்கவில்லை என்பது குறித்து பேசியுள்ளார்.

நயன்தாரா நடிப்பில் நடிகர் ஆர்ஜே பாலாஜி இயக்கத்தில் உருவாகி வந்த 'மூக்குத்தி அம்மன் படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாக நாகர்கோவில் பகுதியில் நடைபெற்று முடிவடைந்தது.  கடந்த மே மாதமே ரிலீஸ் ஆகவேண்டிய இப்படம் கொரோனா ஊரடங்கினாள் தள்ளி சென்றது. இதனால் வருகிற தீபாவளி தினத்தை முன்னிட்டு "மூக்குத்தி அம்மன்" படம் விஜய் டிவி மற்றும் டிஸ்னி ஹாட்ஸ்டார் தளத்தில் வெளியிட படக்குழு முடிவு செய்துள்ளது.

இந்த படத்தில் பழம்பெரும் பாடகியான எல் ஆர் ஈஸ்வரி ஒரு பாடலை பாடியுள்ளதோடு நடித்தும் உள்ளார். இந்நிலையில் பல ஆண்டுகளாக தான் ஏன் நடிக்கவில்லை என்பது குறித்து அவர் ஒரு நேர்காணலில் பதிலளித்துள்ளார். ‘அதில் நான் புதுமனிதன் என்ற ஒரு படத்தில் நடித்தேன். அந்த படத்தின் படப்பிடிப்பு டிசம்பர் 31 ஆம் தேதி தொடங்கி மறுநாள் காலைவரை நடந்தது. படப்பிடிப்பு தளத்திலேயே கேக் எல்லாம் வெட்டிக் கொண்டாடினோம். நடிப்பு எவ்வளவு பெரிய கஷ்டம் என்பதை அந்த நாள் இரவில் தெரிந்துகொண்டேன். அதன் பின்னர் எனக்கு வந்த வாய்ப்புகளை நான் ஏற்கவில்லை.’ எனக் கூறியுள்ளார்.
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

கொரோனாவால் குண்டாகி ஆளே மாறிய தமன்னா – சமீபத்திய புகைப்படம்!