Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

ஸ்ரீரெட்டி கூறியது உண்மைதான்.. ஆனால்? - குட்டி பத்மினி பேட்டி

ஸ்ரீரெட்டி கூறியது உண்மைதான்.. ஆனால்? - குட்டி பத்மினி பேட்டி
, புதன், 25 ஜூலை 2018 (15:19 IST)
நடிகை ஸ்ரீரெட்டி கூறுவது போல் திரைத்துறையில் பாலியல் தொல்லைகள் நெடுங்காலமாக இருக்கிறது என நடிகை குட்டி பத்மினி கூறியுள்ளார்.

 
முருகதாஸ், ராகவா லாரன்ஸ், ஸ்ரீகாந்த், சுந்தர் சி. உள்ளிட்ட தெலுங்கு மற்றும் தமிழ் திரைப்பட பிரபலங்கள் சினிமாவில் வாய்ப்பு தருவதாக கூறி சிலர் தன்னை படுக்கையில் பயன்படுத்திவிட்டு ஏமாற்றி விட்டதாக நடிகை ஸ்ரீரெட்டி புகார் கூறியுள்ளார். அதோடு, தொடர்ச்சியாக தொலைக்காட்சி பேட்டிகளில் பல பரபரப்பு தகவல்களை கூறி வருகிறார். அதோடு, தென்னிந்திய நடிகர் சங்கத்தில் முறையிடவும் அவர் முயன்று வருகிறார்.
 
இந்நிலையில், இதுபற்றி கருத்து தெரிவித்துள்ள நடிகை குட்டி பத்மினி “அவர் கூறுவது போல் பாலியல் தொல்லைகள் சினிமா துறையில் இருப்பது உண்மைதான். நான் சினிமாவை விட்டு விலகியதற்கு கூட அதுதான் காரணம். ஆனால், ஒருமுறை தவறு நடந்தவுடனே ஸ்ரீரெட்டி தன்னை மாற்றிக்கொண்டிருக்க வேண்டும். வாய்ப்பு கிடைக்க வேண்டும் என்பதற்காக தொடர்ந்து அந்த தவறை அவர் செய்திருக்கக் கூடாது. 
webdunia

 
யாரும் அவரை கற்பழிக்கவில்லை. அவருடன் சம்மதத்துடனேயே அனைத்தும் நடந்திருக்கிறது. தற்போது ஒவ்வொருத்தராக அவர் புகார் கூறிவருகிறார். இதனால், சினிமாவில் அவருக்கு வாய்ப்பே கிடைக்காது என அவருக்கு தெரியும். ஆனாலும், தன்னை ஏமாற்றியவர்கள் பற்றி உலகுக்கு தெரியப்படுத்துவேன் என்கிற அவரின் நோக்கம் நிறைவேறியுள்ளது. அவருக்கு என்னுடைய தயாரிப்பில் தொலைக்காட்சி நாடகங்களில் நடிக்க வாய்ப்பு தர நான் தயாராக இருக்கிறேன்” என அவர் தெரிவித்தார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

திரும்பி வந்த ஓ.பி.எஸ் - தெறிக்கும் மீம்ஸ்