2015 ஆம் ஆண்டு மலையாளத்தில் வெளியான படத்தில் மூன்று கதாநாயகிகளில் ஒருவராக நடித்தவர் அனுபமா பரமேஸ்வரன். அந்த படத்தின் அபரிமிதமான வெற்றியால் மூன்று நாயகிகளுமே பிரபலமானார்கள். அதில் ஒருவரான அனுபமா பரமேஸ்வரன் தமிழில் கொடி படத்தின் மூலம் அறிமுகமானார்.
ஆனால் தமிழில் பெரியளவில் வாய்ப்புகள் வரவில்லை. மாறாக தெலுங்கு சினிமா உலகம் அவரை வாரி எடுத்துக்கொண்டது. அங்கு பல வெற்றிப்படங்களில் நடித்து வருகிறார். நீண்ட இடைவெளிக்குப் பிறகு அவர் தற்போது ஜானகி வெர்ஸஸ் ஸ்டேட் ஆஃப் கேரளா ஸ்டேட்” என்ற படத்தில் சுரேஷ் கோபியோடு இணைந்து நடித்துள்ளார். இந்த படம் பாலியல் குற்றத்தால் பாதிக்கப்படும் ஒரு பெண் அதற்காக நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்து போராடுவது போன்ற கதைக்களம் என சொல்லப்படுகிறது.
இந்நிலையில் பாலியல் குற்றம் சம்மந்தமான ஒரு படத்தில் கதாநாயகிக்கு ஜானகி என்று பெயர் இருக்கக் கூடாது என்று மத்திய தணிக்கை வாரியம் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தது. இந்த வழக்கில் உயர்நீதிமன்றம் “சீதா, ராம் என்ற பெயர்களில் படங்கள் இருக்கும் போது ஏன் ஜானகி என்ற பெயரில் படம் இருக்கக் கூடாது? அப்படி பெயர் இருந்தால் என்ன பிரச்சனை எனக் கேள்வி எழுப்பியுள்ளது.