Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

ட்ரோல் செய்தவர்களுக்கும் நன்றி… 10 ஆண்டுகளை நிறைவு செய்த மகிழ்ச்சியில் கீர்த்தி சுரேஷ்!

ட்ரோல் செய்தவர்களுக்கும் நன்றி… 10 ஆண்டுகளை நிறைவு செய்த மகிழ்ச்சியில் கீர்த்தி சுரேஷ்!
, வியாழன், 16 நவம்பர் 2023 (10:00 IST)
தமிழ் சினிமாவில் இது என்ன மாயம் திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார் கீர்த்தி சுரேஷ். அதன் பின்னர் அவர் நடித்த ரஜினிமுருகன் திரைப்படம் பெரிய வெற்றியைப் பெற்றதை அடுத்து முன்னணி நடிகையானார்.

ரஜினி, விஜய், சூர்யா, சிவகார்த்திகேயன் உள்ளிட்ட முன்னணி நடிகர்களோடு இணைந்து நடித்துள்ள தன் கதாபாத்திரத்துக்கு முக்கியத்துவம் உள்ள கதைகளையும் தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார்.  தெலுங்கில் அவர் நடித்த மகாநடி படத்துக்கு சிறந்த நடிகைக்கான தேசிய விருதைப் பெற்றார்.

சமீபத்தில் அவர் நடிப்பில் வெளியான தசரா திரைப்படம் தெலுங்கில் நல்ல வெற்றியைப் பெற்று 100 கோடி ரூபாய்க்கு மேல் வசூல் செய்தது. அதன் பின்னர் தமிழில் அவர் நடித்த மாமன்னன் திரைப்படமும் நல்ல விமர்சனங்களையும் வசூலையும் குவித்தது.

இந்நிலையில் சினிமாவில் நுழைந்து 10 ஆண்டுகளை நிறைவு செய்துள்ள கீர்த்தி சுரேஷ் அது குறித்து நெகிழ்ச்சி பதிவை வெளியிட்டுள்ளார். அதில் “10 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளேன் என்பது மகிழ்ச்சியான ஒன்று. என் பெற்றோருக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.  என்னுடைய குருவான ப்ரியதர்ஷனுக்கும் நன்றி. அவர்தான் சினிமாவில் என் தொடக்கப்புள்ளிக்கான காரணம். என்னுடைய தயாரிப்பாளர்கள், இயக்குநர்கள், நடிகர்கள், ரசிகர்கள் என அனைவருக்கும் நன்றிக்கடன் பட்டிருக்கிறேன். என்னை ட்ரோல் செய்தவர்களுக்கும் நன்றி” எனக் கூறியுள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

சினிமா ஆகிறது உலக பணக்காரர் எலான் மஸ்க்கின் வாழ்க்கை!