Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

15 ஆண்டுகளாக தொடரும் காதல்… வருங்கால கணவர் பெயரை அறிவித்த கீர்த்தி சுரேஷ்…!

Advertiesment
15 ஆண்டுகளாக தொடரும் காதல்… வருங்கால கணவர் பெயரை அறிவித்த கீர்த்தி சுரேஷ்…!

vinoth

, புதன், 27 நவம்பர் 2024 (12:06 IST)
கீர்த்தி சுரேஷ் மலையாள முன்னணி தயாரிப்பாளரான சுரேஷின் மகள். இவர் குழந்தை நட்சத்திரமாக மலையாள சினிமாவில் பல படங்களில் நடித்துள்ளனர். வளர்ந்த பின்னர் கதாநாயகியாகவும் நடிக்கத் தொடங்கினார். தமிழில் அவரின் முதல் படம் ஏ எல் விஜய் இயக்கிய ‘இது என்ன மாயம்’ திரைப்படம்தான். அதன் பின்னர் வெளியான ரஜினி முருகன் படம் அவரை முன்னணி நடிகையாக்கியது.

இப்போது தமிழ் சினிமாவில் தனக்கென்று ஒரு நிலையான மார்க்கெட் வைத்திருக்கும் நடிகைகளில் கீர்த்தி சுரேஷும் ஒருவர். ரஜினி, விஜய், சூர்யா, சிவகார்த்திகேயன் உள்ளிட்ட முன்னணி நடிகர்களோடு இணைந்து நடித்துள்ள அவர் இடையில் நடிகையர் திலகம் திரைப்படத்துக்காக சிறந்த நடிகைக்கான தேசிய விருதைப் பெற்றார். அதன் பின்னர்  பெண்குயின், சாணிக் காயிதம் மற்றும் ரகு தாத்தா போன்ற கதாநாயகிக்கு முக்கியத்துவம் கதைகளிலும் நடித்து வருகிறார். 

இந்நிலையில் அவர் இந்த ஆண்டு இறுதியில் அவரின் நீண்ட கால தோழர் ஆண்டனி தட்டில் என்பவரை மணக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகின. இந்நிலையில் கீர்த்தி சுரேஷ் அதை இப்போது உறுதி செய்துள்ளார். தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் “15 ஆண்டுகளாக… இன்னும் தொடரும் … எப்போதும் அது ஆண்டனி X கீர்த்தி” என பதிவிட்டு ஒரு புகைப்படத்தையும் வெளியிட்டு திருமண செய்தியை மறைமுகமாக உறுதிப் படுத்தியுள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

தேவி ஸ்ரீ பிரசாத்தால் ‘குட் பேட் அக்லி’ ரிலீஸில் ஏற்பட்ட மாற்றம்!