Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இரட்டிப்பு மகிழ்ச்சியில் கீர்த்தி சுரேஷ்

Webdunia
வியாழன், 13 டிசம்பர் 2018 (20:36 IST)
இது என்ன மாயம் படத்தின் மூலம் கீர்த்தி சுரேஷ் தமிழ் சினிமாவில்  அறிமுகமானார். அந்த படம் சுத்தமாக ஓடவில்லை. இப்படத்தை தொடர்ந்து என்ன மாயமோ, மந்திரமோ தெரியல அடுத்தடுத்து படங்கள் புக் ஆகின. 
 
ரஜினி முருகன், ரெமோ, பைரவா, தானா சேர்ந்த கூட்டம், சாமி 2 என கலக்கு, கலக்கு என கலக்கினார் கீர்த்தி. மற்ற நடிகைகள் பல வருடங்களாக போராடி பெற்ற புகழை சில படங்களிலேயே பெற்றார் கீர்த்தி. 
 
இவரது நடிப்பு திறமையை வெளிப்படுத்த சாவித்திரியின் பயோகிராபியான நடிகையர் திலகம் படம் கிடைத்தது. இந்த படத்தில் புகுந்து விளையாடினார் கீர்த்தி. விளைவு, சிறந்த நடிகைக்கான விருதினை ஆந்திர அரசு கூப்பிட்டு கொடுத்தது.  
 
இப்படத்தில் இவர் நடித்ததை பாராட்டாதவர்கள் யாரும் இல்லை, இந்நிலையில் IMDB என்ற வெளிநாட்டு தளம் ஒன்று இந்தியாவின் சிறந்த 10 படங்களில் மகாநதிக்கு 4வது இடத்தை கொடுத்துள்ளது.
 
இதோடு டுவிட்டரில் கீர்த்தி 2 மில்லியன் பாலோவர்ஸை பெற்றுள்ளார், இதனால் கீர்த்தி சுரேஷ் இரட்டிப்பு மகிழ்ச்சியில் உள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

கரகாட்டக்காரன் படத்தின் இரண்டாம் பாகம் வருமா? நடிகர் ராமராஜன் பதில்!!

'கன்னி' திரைப்பட விமர்சனம்!

தேவையான நிதி ஒதுக்குவது இல்லை, கேட்ட திட்டங்களை செயல்படுத்துவது இல்லை- முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயக்குமார் எச்சரிக்கை!

'மக்கள் செல்வன்' விஜய் சேதுபதி நடிக்கும் 'VJS 51' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் டைட்டிலுக்கான டீசர் வெளியீடு

பகலறியான் திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!!

அடுத்த கட்டுரையில்
Show comments