Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இளம் இசையமைப்பாளர்கள் இசையில் கவனம் செலுத்துவதில்லை.. தனுஷ் தந்தை கஸ்தூரி ராஜா ஆவேசம்!

vinoth
செவ்வாய், 27 மே 2025 (10:00 IST)
தமிழ் சினிமாவின் மூத்த இயக்குனர்களில் ஒருவர் கஸ்தூரி ராஜா. இவர் ராஜ்கிரண் நடிப்பில் உருவான ‘என் ராசாவின் மனசிலே’ படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார். அதன் பின்னர் எட்டுப்பட்டி ராசா உள்ளிட்ட வெற்றிப்படங்களைக் கொடுத்தார்.

இவர் இயக்குனராக மட்டும் இல்லாமல் பாடல் ஆசிரியராகவும் தன்னுடையப் படங்களில் பணியாற்றியுள்ளார். இவர் எழுதிய ‘எட்டுப்பட்டி ராசா’ மற்றும் “ஒத்த ரூபாயும் தரேன்” உள்ளிட்ட பாடல்கள் ஹிட்டாகின. சமீபத்தில் இவர் எழுதிய ‘ஒத்த ரூபாயும் தரேன்’ பாடல் அஜித்தின் ‘குட் பேட் அக்லி’ படத்தில் பயன்படுத்தப்பட்டது. அது சம்மந்தமாக தன்னிடம் அனுமதிக் கேட்கவில்லை என அதிருப்தியைத் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் இப்போது அவர் இளம் இசையமைப்பாளர்கள் இசையில் கவனம் செலுத்துவதில்லை என குற்றம்சாட்டியுள்ளார். அதில் “இப்போதுள்ள இசையமைப்பாளர்களால் இளையராஜா மற்றும் தேவா போல இசையமைக்க முடியாததால் இயக்குனர்கள் பழையப் பாடல்களைப் பயன்படுத்துகிறார்கள். அப்படிப் பயன்படுத்தும்போது அனுமதிக் கேட்டுப் பயன்படுத்தலாம். இசையமைப்பாளர்கள் இசையில் கவனம் செலுத்துவதில்லை” எனக் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

‘மகாராஜா’ இயக்குனர் நித்திலனை அழைத்துப் பாராட்டிய ஆஸ்கர் வென்ற திரைக்கதை எழுத்தாளர்!

வட சென்னை 2 எப்போது தொடங்கும்… குபேரா பட விழாவில் தனுஷ் கொடுத்த அப்டேட்!

’மதயானை கூட்டம்’ இயக்குனர் விக்ரம் சுகுமாரன் திடீர் மரணம்.. அதிர்ச்சியில் திரையுலகம்..!

முத்த மழை பாடல்! தீ பெஸ்ட்டா? சின்மயி பெஸ்ட்டா? - ஒப்பீடு குறித்து பாடகி சின்மயி கருத்து!

கமல் படத்தை ரிலீஸ் செய்தால் தியேட்டரை கொளுத்துவோம்! - கர்நாடக தியேட்டர்களுக்கு மிரட்டல்!

அடுத்த கட்டுரையில்
Show comments