Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

மக்களும் கைவிடவில்லை, மகேசனும் கைவிடவில்லை: மதுமிதா குறித்து கஸ்தூரி

Advertiesment
மக்களும் கைவிடவில்லை, மகேசனும் கைவிடவில்லை: மதுமிதா குறித்து கஸ்தூரி
, ஞாயிறு, 7 ஜூலை 2019 (10:34 IST)
பிக்பாஸ் போட்டியாளர்களில் ஒருவரான மதுமிதாவை வீட்டை விட்டு வெளியேற்ற வேண்டும் என கிட்டத்தட்ட அனைவருமே வரிந்து கட்டி கொண்டு செயல்பட்டு வருகின்றனர். இந்த லிஸ்ட்டில் மோகன் வைத்யா பெயர் இருப்பது பெரும் ஆச்சரியம்
 
நேற்று பிக்பாஸ் வீட்டில் இருந்து யார் வெளியேறினால் நன்றாக இருக்கும் என கமல் கேட்டபோது எட்டு பேர் மதுமிதா தான் வெளியேற வேண்டும் என்று கூறினர். மதுமிதா தான் ஒரு தமிழ்ப்பொண்ணு என்று கூறியதால் ஆத்திரம் அடைந்த வனிதா குரூப்பில் உள்ள சாக்சி, அபிராமி, ஷெரின் ஆகியோர் மதுமிதா மீது வன்மத்துடன் உள்ளனர். இதற்கு கவின், சாண்டி, உள்ளிட்டோரும் ஜால்ரா போடுவதுதான் விந்தையிலும் விந்தையாக உள்ளது
 
பிக்பாஸ் வீட்டில் நுழைந்த நாள் முதல் சர்ச்சையை ஏற்படுத்தி கொண்டிருக்கும் மீராமிதுன், யாரையும் பேச விடாமல் தான் சொல்வதை மட்டுமே கேட்க வேண்டும் என்று அராஜகத்துடன் நடந்து வரும் வனிதாவை விட மதுமிதா எவ்வளவோ மேல் என்பதுதான் மக்களின் எண்ணமாக உள்ளது
 
இந்த நிலையில் இதுகுறித்து நடிகை கஸ்தூரி தனது டுவிட்டரில், 'மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு.  மதுமிதாவை மக்களும் கைவிடவில்லை, அவள் வணங்கும் மகேசனும் கைவிடவில்லை.  தற்போது மதுமிதா தனிமைப்படுத்தப்பட்டுள்ளார். ஆனால் அவர் நிச்சயம் மன உறுதியுடன் எதிர்ப்புகளை எதிர்கொள்வார்' என்று கூறியுள்ளார்

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

சைகையால் சாக்ஷிக்கு செக் வைத்த கமல் - இன்று வெளியேறப்போவது இவர்தானா? - வீடியோ!