Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஆன்லைன் விமர்சனங்களுக்கு ‘உள்நோக்கம்’ உள்ளது.. இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் அதிருப்தி!

vinoth
திங்கள், 5 மே 2025 (13:12 IST)
கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் சூர்யா உள்ளிட்டவர்கள் நடிப்பில் உருவான ‘ரெட்ரோ’ திரைப்படம் கடந்த வாரம் ரிலீஸாகி கலவையான விமர்சனங்களைப் பெற்றுள்ளது. இருந்தும் படத்துக்கு நல்ல வசூல் கிடைத்துள்ளது. படம் இதுவரை இந்தியாவில் மட்டும் 43 கோடி ரூபாய்க்கு மேல் வசூலித்துள்ளதாக சொல்லப்படுகிறது.

படத்தில் இருக்கும் குறைகள் பெரிதாக்கப்பட்டு ஆன்லைனில் இந்தப் படத்தைத் தாக்கும் விமர்சனங்கள் மற்றும் மீம்களும் அதிகளவில் பரவி வருகின்றன. இதுபற்றி நேர்காணல் ஒன்றில் பேசியுள்ள இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் ‘இந்தப் படத்தின் மூலம் ஆன்லைன் விமர்சனங்களைப் பார்க்கக் கூடாது என்பதைக் கற்றுக் கொண்டுள்ளேன்” எனக் கூறியுள்ளார்.

மேலும் “ஆன்லைன் விமர்சனங்களில் நிறைய அஜெண்டாக்கள் உள்ளன. நான் எல்லா விமர்சனங்களையும் சொல்லவில்லை. சில விமர்சனங்களைப் பார்த்தாலே அது தெரியும். ஒரு படம் வெளியாவது என்பது அந்தப் படக்குழுவினருக்கு ஒரு கனவு. ஆனால் அவர்கள் அந்த மகிழ்ச்சியை அனுபவிக்கக் கூடாது என்பதாகவே சில  விமர்சனங்கள் உள்ளன.படத்தை ரசிகர்கள் எப்படி வரவேற்கிறார்கள் என்பதே முக்கியம். அதை நான் இந்த படத்தில் இருந்து கற்றுக் கொண்டுள்ளேன்” எனக் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

பேரன்போடு வாழும் வாழ்வைப் போதிக்கிறது.. டூரிஸ்ட் பேமிலி படத்தைப் பாராட்டிய அமைச்சர்!

அதிரிபுதிரி வரவேற்பு… தமிழில் டப் செய்யப்பட்டு ரிலீஸ் ஆகும் மோகன்லாலின் ‘துடரும்’!

மணிரத்னம் இயக்கத்தில் சிம்பு… லைகா தயாரிப்பில் மெகா கூட்டணி!

வெங்கட் பிரபு இயக்கத்தில் சிவகார்த்திகேயன்… ஷூட்டிங் தொடங்குவது எப்போது?

10 கோடி ரூபாய் வசூலை நெருங்கும் ‘டூரிஸ்ட் பேமிலி’… விடுமுறை நாளில் அதிகரித்த பார்வையாளர்கள்!

அடுத்த கட்டுரையில்
Show comments