Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

“விஜய், அஜித்தோட படம் பண்றது ஒரு இயக்குனரோட இலக்கு ஆகிடக் கூடாது” – இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ்!

“விஜய், அஜித்தோட படம் பண்றது ஒரு இயக்குனரோட இலக்கு ஆகிடக் கூடாது” – இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ்!

vinoth

, சனி, 1 ஜூன் 2024 (06:48 IST)
தமிழ் சினிமாவில் குறும்பட அலை வெற்றிகரமாக வீசியபோது அதிலிருந்து வந்த இயக்குனர்களில் முக்கியமானவர் இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ். அவர் இயக்கிய பீட்சா, ஜிகர்தண்டா, பேட்ட, ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் ஆகிய படங்கள் அவரை ஒரு குறிப்பிடத்தக்க இயக்குனர் ஆக்கின.

சமீபத்தில் அவர் இயக்கிய ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் திரைப்படம் பெரும் வரவேற்பையும் பாராட்டுகளையும் பெற்றது. இதையடுத்து அவர் சூர்யா நடிக்கும் புதிய படத்தை இயக்கவுள்ளார்.

இந்நிலையில் நேற்று நடந்த ஒரு விருது விழாவில் கலந்துகொண்டு பேசிய அவர் “விஜய், அஜித் மாதிரியான பெரிய ஹீரோக்களோட படம் பண்றது மட்டுமே ஒரு இயக்குனரின் இலக்கு என்று ஆகிடக் கூடாது. நான் அது போன்ற விஷயங்களை பெரிதாக எடுத்துக் கொள்வது கிடையாது” எனக் கூறியுள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

தனுஷின் அடுத்த இந்தி பட ஷூட்டிங் எப்போது? வெளியான தகவல்!