Webdunia - Bharat's app for daily news and videos

Install App

என்னது வெப் சீரிஸாக வருகிறதா சூர்யாவின் ‘ரெட்ரோ’ திரைப்படம்?

vinoth
செவ்வாய், 17 ஜூன் 2025 (13:52 IST)
கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் சூர்யா, பூஜா ஹெக்டே,ஜோஜு ஜார்ஜ் மற்றும் ஜெயராம் உள்ளிட்டவர்கள் நடிப்பில், சந்தோஷ் நாராயணன் இசையில் உருவான ‘ரெட்ரோ’ திரைப்படம் மே 1 ஆம் தேதி ரிலீஸாகி கலவையான விமர்சனங்களைப் பெற்றது.

ஆனாலும் இந்த படத்துக்கு நல்ல தொடக்கம் கிடைத்தது. முதல் நாளில் 20 கோடி ரூபாய் அளவுக்கு வசூலித்த இந்த படம் அதன் பின்னர் வசூலில் அடிவாங்கியது. படம் வெளியாகி 5 நாட்களில் உலகளவில் இந்த படம் 104 கோடி ரூபாய் வசூலைக் கடந்ததாகப் படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. அதன் பின்னர் வசூல் படிப்படியாகக் குறைந்தது. தமிழ்நாட்டில் சுமார் 40 கோடி ரூபாய் அளவுக்குதான் வசூலித்ததாக சொல்லப்படுகிறது.

தற்போது இந்த படம் ஓடிடியில் ஸ்ட்ரீம் ஆகிக் கொண்டிருக்கிறது. இந்நிலையில் படத்தின் இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் சமீபத்தில் அளித்த ஒரு நேர்காணலில் “ரெட்ரோ படத்தின் எக்ஸ்டெண்டட் வெர்ஷனை நான்கைந்து அத்தியாயங்கள் கொண்ட லிமிடெட் வெப் சீரிஸாக ரிலீஸ் செய்யும் திட்டம் உள்ளதாக தெரிவித்துள்ளார். படத்துக்குத் தியேட்டர் மற்றும் ஓடிடியில் பெரிய வரவேற்புக் கிடைக்காத நிலையில் வெப் சீரிஸ் வடிவத்தில் வரவேற்புக் கிடைக்குமா என்று கேள்வி எழுந்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

'ரெட்ரோ' படத்திற்கு எதிராக பணப் பட்டுவாடா வெறுப்பு பிரச்சாரம்! இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் பகீர் தகவல்:

ஜான்வி கபூரின் லேட்டஸ்ட் க்ளாமரஸ் க்ளிக்ஸ்!

அழகுப் பதுமை துஷாரா விஜயனின் லேட்டஸ்ட் கிளிக்ஸ்!

என்னது வெப் சீரிஸாக வருகிறதா சூர்யாவின் ‘ரெட்ரோ’ திரைப்படம்?

கமல்ஹாசனை மன்னிப்புக் கேட்க உத்தரவிட முடியாது.. கர்நாடக உயர்நீதிமன்றத்துக்கு உச்சநீதிமன்றம் கண்டனம்!

அடுத்த கட்டுரையில்
Show comments