Webdunia - Bharat's app for daily news and videos

Install App

“கேம்சேஞ்சர் கதை ஏன் ஹிட்டாகவில்லை என்று…” – கார்த்திக் சுப்பராஜ் பதில்!

vinoth
வியாழன், 24 ஏப்ரல் 2025 (18:14 IST)
ஷங்கர் இயக்கத்தில் ராம்சரண் நடிப்பில், தில் ராஜூ தயாரித்த ‘கேம்சேஞ்சர்’ திரைப்படம் சங்கராந்தியை முன்னிட்டு ஜனவரி 10 ஆம் தேதி ரிலீஸ் ஆனது. இந்த படத்துக்கு இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் கதை எழுதியிருந்தார். படத்தில் வில்லனாக எஸ் ஜே சூர்யா நடிக்க, தமன் முதல் முதலாக ஷங்கர் படத்துக்கு இசையமைக்க, திரு ஒளிப்பதிவு செய்திருந்தார்.

படம் மிக அதிக பொருட்செலவில் பிரம்மாண்டமாக உருவாகி ரிலீஸானது. முதல் நாளில் உலகளவில் 186 கோடி ரூபாய் வசூலித்ததாக அறிவிக்கப்பட்டது. அதன் பின்னர் எழுந்த எதிரமறையான விமர்சனங்களால் வசூலில் பெரிய வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது.இதனால் இந்த படத்தின் பட்ஜெட்டில் 50 சதவீத வசூலைக் கூட படம் எடுக்கவில்லை என சொல்லப்படுகிறது.

இந்நிலையில் இந்த படத்தின் கதையை எழுதிய கார்த்திக் சுப்பராஜ் ஏன் படம் அந்த ஹிட்டாகவில்லை என்பதைத் தன்னால் கணிக்க முடியவில்லை என்று கூறியுள்ளார். இதுபற்றி பேசும்போது “அந்த படத்துக்கான ஒன்லைன் கதையைதான் நான் கூறினேன். அதை ஷங்கர் சார் எப்படி பிரம்மாண்டமாக உருவாக்கப் போகிறார் என்பதைப் பார்க்க ஆவலாக இருந்தேன். கதையில் பல பேரின் வேலை இருந்தது. திரைக்கதையிலும் மாற்றங்கள் செய்யப்பட்டன. அந்தக் கதை ஏன் வரவேற்புப் பெறவில்லை என்பதை என்னால் கணிக்க முடியாது” எனக் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

வேட்டையன் படத்திற்கு பின் மீண்டும் ரஜினிகாந்த் - பகத் பாசில் கூட்டணி.. பரபரப்பு தகவல்..!

காஷ்மீர் தாக்குதல் எதிரொலி! அந்த பாலிவுட் படத்தை தடைசெய்ய வலுக்கும் குரல்கள்! - அப்படி என்ன இருக்கு அதுல?

‘தமிழ் சினிமாவில் தமிழில் பாடல்கள் எழுத முடியவில்லை’… இசையமைப்பாலர் ஷான் ரோல்டன் புலம்பல்!

லாஜிக் இல்லை.. காமெடியும் பெரிய அளவில் இல்லை.. ‘கேங்கர்ஸ்’ படத்திற்கு நெகட்டிவ் ரிசல்ட்..!

இறுதிக் கட்டத்தில் சூர்யா 45… க்ளைமேக்ஸ் காட்சியைப் படமாக்கும் ஆர் ஜே பாலாஜி!

அடுத்த கட்டுரையில்
Show comments