Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பழைய பிரச்சனையை மறந்த கார்த்திக் சுப்பராஜ்… முட்டிக்கொண்ட தயாரிப்பாளரோடு மீண்டும் படம்!

Webdunia
செவ்வாய், 2 ஆகஸ்ட் 2022 (15:12 IST)
கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சித்தார்த் மற்றும் பாபி சிம்ஹா ஆகியோர் நடிப்பில் 2014 ஆம் ஆண்டு வெளியான ஜிகர்தண்டா திரைப்படம் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது.

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் சித்தார்த், பாபி சிம்ஹா, லட்சுமி மேனம் ஆகியோர் நடிப்பில் 2014ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் ஜிகர்தண்டா. இப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றதுடன் நல்ல விமர்சனத்தையும் பெற்றது. இந்த படத்தில் அருமையான நடிப்பை வெளிப்படுத்திய பாபி சிம்ஹாவுக்கு தேசிய விருதும் கிடைத்தது.

இந்த படம் பல்வேறு மொழிகலீல் ரீமேக் செய்யப்பட்டுள்ளது. ஜிகர்தண்டாவின் இந்தி ரீமேக்கில் அக்‌ஷய் குமார் நடித்தார்.  ஆனால் தமிழில் பெற்ற வெற்றியை இந்தியில் அந்த திரைப்படம் பெறவில்லை. அதுமட்டுமில்லாமல் மோசமான விமர்சனங்களையும் பெற்றது.

இந்நிலையில் இப்போது ஜிகர்தண்டா படத்தின் இரண்டாம் பாகம் உருவாக உள்ளது. முதல் பாகத்தை தயாரித்த கதிரேசனே இந்த பாகத்தையும் தயாரிக்க உள்ளதாக சொல்லப்படுகிறது. கதிரேசனுக்கும் கார்த்திக் சுப்பராஜுக்கும் ஜிகர்தண்டா படத்தின் உருவாக்கத்தின் போது பிரச்சனை ஏற்பட்டு அதனால் இருவரும் மோதிக்கொண்டனர். கார்த்திக் சுப்பராஜ் அடுத்து இயக்கிய இறைவி படத்தில் கூட கதிரேசனை இழிவு செய்து ஒரு கதாபாத்திரம் உருவாக்கியதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன. இந்நிலையில் இப்போது இருவரும் பழைய பிரச்சனைகளை மறந்து மீண்டும் இணைய உள்ளதாக சொல்லப்படுகிறது. இந்த படத்தில் லாரன்ஸ் நடிக்க வாய்ப்புள்ளதாகவும் சொல்லப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

கரகாட்டக்காரன் படத்தின் இரண்டாம் பாகம் வருமா? நடிகர் ராமராஜன் பதில்!!

'கன்னி' திரைப்பட விமர்சனம்!

தேவையான நிதி ஒதுக்குவது இல்லை, கேட்ட திட்டங்களை செயல்படுத்துவது இல்லை- முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயக்குமார் எச்சரிக்கை!

'மக்கள் செல்வன்' விஜய் சேதுபதி நடிக்கும் 'VJS 51' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் டைட்டிலுக்கான டீசர் வெளியீடு

பகலறியான் திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!!

அடுத்த கட்டுரையில்
Show comments