Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மாறன் தோல்வி எதிரோலி… கார்த்திக் நரேனின் அடுத்த படத்துக்கு பாதிப்பா?

Webdunia
வியாழன், 19 மே 2022 (15:55 IST)
மாறன் படத்துக்குப் பிறகு இயக்குனர் கார்த்திக் நரேன் இப்போது ‘நிறங்கள் மூன்று’ என்ற திரைப்படத்தை இயக்கி வருகிறார்.

தனுஷ் நடிப்பில் கார்த்திக் நரேன் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ’மாறன் மார்ச் 11 ஆம் தேதி டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டாரில் ரிலீஸானது. வெளியானது முதல் மோசமான விமர்சனங்களை சந்தித்தது. அதிகளவு சமூகவலைதளங்கள் ட்ரோல் ஆனது.

மாறன் படப்பிடிப்பு சமயத்தின்போதே இயக்குனர் கார்த்திக் நரேனுக்கும் தனுஷுக்கும் இடையே மோதல் எழுந்ததாகவும், அதனால் கார்த்திக் நரேன் கோபித்துக்கொண்டு படப்பிடிப்புத் தளத்தை விட்டே வெளியே சென்றுவிட்டதாகவும், தனுஷே பல காட்சிகளை இயக்கியதாகவும் செய்திகள் வெளியாகின. அதன் பின்னர் ஒருவழியாக படம் முடிந்து ரிலிஸானது. ஆனால் படத்துக்காக எந்த ப்ரமோஷனிலும் தனுஷும் இயக்குனரும் சேர்ந்து கலந்துகொள்ளவில்லை.

இந்நிலையில் மாறன் படத்தின் தோல்வியால் கார்த்திக் நரேன் தற்போது அதர்வா, சரத்குமார் மற்றும் ரஹ்மான் ஆகியோரை வைத்து இயக்கும் ‘நிறங்கள் மூன்று’ திரைப்படத்துக்கு சிக்கல் எழுந்துள்ளதாம். இந்த படத்தை வாங்குவதற்கு விநியோகஸ்தர்கள் மத்தியில் ஆர்வம் இல்லை என்று சொல்லப்படுகிறது.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

’கங்குவா’ தோல்விக்கு பின் மீண்டெழுந்த சூர்யா.. ‘கருப்பு’ பிசினஸ் அமோகம்..!

’வாடிவாசலை அடுத்து சிம்பு - வெற்றிமாறன் படமும் டிராப்பா? கோலிவுட்டில் பரபரப்பு..!

ஹோம்லி க்யூன் பிரியங்கா மோகனின் அசத்தல் புகைப்படத் தொகுப்பு!

அழகியே… சிவப்பு நிற உடையில் கலர்ஃபுல் போஸ் கொடுத்த மிருனாள் தாக்கூர்!

மீண்டும் லோகேஷ் இயக்கத்தில் நடிக்க ஆசைப்படும் ரஜினிகாந்த்!

அடுத்த கட்டுரையில்
Show comments