Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

“பொன்னியின் செல்வனை முடிக்க முடியாது எனப் பேசினார்கள்… ஆனால் 120 நாட்களில்…” நடிகர் கார்த்தி பெருமிதம்!

“பொன்னியின் செல்வனை முடிக்க முடியாது எனப் பேசினார்கள்… ஆனால் 120 நாட்களில்…” நடிகர் கார்த்தி பெருமிதம்!
, திங்கள், 1 ஆகஸ்ட் 2022 (10:21 IST)
பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் முதல் சிங்கிள் பாடலான பொன்னி நதி பாடல் நேற்று வெளியாகியுள்ளது.

கல்கி எழுதிய பிரபல நாவலான பொன்னியின் செல்வனை திரைப்படமாக எடுத்து முடித்துள்ளார் மணிரத்னம். இந்த படத்தில் விக்ரம், ஜெயம் ரவி, கார்த்தி, த்ரிஷா, ஐஸ்வர்யா ராய் என பெரிய நடிக பட்டாளமே நடித்துள்ளனர். இந்த படத்திற்கு ஏ ஆர் ரகுமான் இசையமைத்துள்ளார். இரண்டு பாகங்களாக உருவாகியுள்ள இந்த படத்தின் முதல் பாகம் செப்டம்பர் 30ம் தேதி வெளியாக உள்ளது.

இந்நிலையில் படத்தில் இடம்பெற்ற ‘பொன்னி நதி’ என்ற பாடலை நேற்று வெளியிட்டனர். இந்த பாடலை கவிஞர் இளங்கோ கிருஷ்ணன் எழுத, ரஹ்மான் பாடியுள்ளார். இந்த பாடல் வெளியீட்டு நிகழ்வு சென்னையில் உள்ள வணிகவளாகத்தில் நேற்று நடந்தது. அதில கலந்துகொண்டு பேசினார் நடிகர் கார்த்தி.

அப்போது “பொன்னியின் செல்வன் கதை அனைவருக்குமே தெரிந்ததுதான். ஆனால் அதை படமாகப் பார்க்க நாம் அனைவருமே காத்திருக்கிறோம். இது நம் படம். தமிழ் படம். இந்த திரைப்படத்தை எடுத்து முடிக்க முடியாது என அனைவருமே கூறினர். ஆனால் நாங்கள் இரண்டு பாகங்களையும் 120 நாட்களில் படமாக்கி முடித்தோம்.” எனக் கூறியுள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

“பொன்னியின் செல்வன் மூலமாக நிறைய கனவுகள் நிறைவேறியுள்ளன…” ஜெயம் ரவி மகிழ்ச்சி!