Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பொன்னியின் செல்வனில் தான் நடிக்க ஆசைப்பட்ட பாத்திரத்தில் நடித்த கார்த்திக்கு ரஜினியின் பாராட்டு வார்த்தைகள்!

Webdunia
வெள்ளி, 7 அக்டோபர் 2022 (08:42 IST)
பொன்னியின் செல்வன் திரைப்படம் சமீபத்தில் வெளியாகி மிகப்பெரிய வெற்றியைப் பெற்றுள்ளது.

பொன்னியின் செல்வன் நாவலை படமாக்க எம்ஜி ஆர் மற்றும் கமல் முயன்று அது நிறைவடையாத நிலையில் இயக்குனர் மணிரத்னம் தற்போது சாத்தியமாக்கியுள்ளார். அவரும் ஏற்கனவே ஒருமுறை தொடங்கி ஆனால் அதை முடிக்காமல் கைவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் இப்போது இரண்டு பாகங்களாக உருவாகி முதல் பாகம் கடந்த வாரம் ரிலீஸாகி நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. படத்தைப் பார்த்த சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் பொன்னியின் செல்வன் படத்தில் அருள்மொழி வர்மனாக நடித்துள்ள ஜெயம் ரவியைப் பாராட்டியுள்ளார்.

அதே போல பொன்னியின் செல்வன் நாவலில் தான் நடிக்க ஆசைப்பட்ட வந்தியத்தேவன் கதாபாத்திரத்தில் தற்போது நடித்துள்ள கார்த்தியையும் அவர் பாராட்டியுள்ளார். இது சம்மந்தமாக கார்த்தி பகிர்ந்துள்ள பதிவில் “ ரஜினி சார் எங்கள் அழைப்பு மிகவும் ஸ்பெஷலானது. மற்றவர்களின் வேலையைப் பாராட்ட நீங்கள் எடுத்துக்கொள்ளும் முனைப்புகள் எப்போதும் ஆச்சர்யமானவை. நன்றி சார். நிறைய அன்பும் மரியாதையும்” எனக் கூறியுள்ளார். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

மீண்டும் புத்துணர்ச்சி பெறும் சிவகார்த்திகேயன் - சிபி சக்கரவர்த்தி படம்.. இசையமைப்பாளர் இவரா?

சூர்யாவின் அடுத்த பட இயக்குனர், தயாரிப்பாளர் யார்? புதிய தகவல்..!

சினிமாவுக்கு வரும் ஷங்கர் மகன்.. உதயநிதி மகன்.. இயக்குனர்கள் யார் யார்?

நான் விளம்பரம் செய்தது கேமிங் செயலிகளுக்கு மட்டுமே.. அமலாக்கத்துறை விசாரணைக்கு பின் விஜய் தேவரகொண்டா பேட்டி..

கருநிற உடையில் கண்குளிர் போட்டோஷூட்டை நடத்திய திவ்யபாரதி!

அடுத்த கட்டுரையில்
Show comments