Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

நம்பிக்கையை விடாமல் ரஜினிக்காக கதை செய்யும் இயக்குனர்… தயாரிப்பாளர் இவரா?

நம்பிக்கையை விடாமல் ரஜினிக்காக கதை செய்யும் இயக்குனர்… தயாரிப்பாளர் இவரா?
, வியாழன், 6 அக்டோபர் 2022 (16:15 IST)
துல்கர் சல்மான், ரக்ஷன், ரிதுவர்மா உள்ளிட்ட பலரது நடிப்பில் இயக்குனர் தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில் உருவான படம் ’கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால். இந்த திரைப்படம் 2019 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்றது. மேலும் இந்த படம் வெளியான ஒரு சில வாரங்களில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டதால் உடனே ஓடிடி தளத்திலும் வெளியாகி ரசிகர்களின் வரவேற்பை பெற்றது.

இந்த நிலையில் இந்த படத்தை ரசிகர்கள் மட்டுமின்றி திரையுலக பிரபலங்கள் பலர் பாராட்டினாலும் ரஜினியே போனில் அழைத்து பாராட்டியது கவனத்தை ஈர்த்தது. மேலும் அந்த உரையாடலில் ‘எனக்கும் ஏதாவது கதை இருந்தா சொல்லுங்க’ எனக் கூறியிருந்தார்.

இந்நிலையில் ரஜினியின் அடுத்த படத்தை இயக்கப் போவது தேசிங் பெரியசாமிதான் என்ற தகவல் பகிரப்பட்டு வருகிறது. ஆனால் அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் வெளியாகவில்லை. ரஜினி தற்போது நெல்சன் இயக்கும் படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில் தேசிங் பெரியசாமி விடாமல் ரஜினிக்காக கதையை இப்போது எழுதி வருவதாகவும், தயாரிப்பாளர் தாணுதான் அவருக்கு அலுவலகம் அமைத்துக் கொடுத்து திரைக்கதை பணிகளை மெற்கொள்ள சொல்லியுள்ளதாகவும் சொல்லப்படுகிறது. அதனால் இந்த படம் விரைவில் உருவாக வாய்ப்புள்ளதாக சொல்லப்படுகிறது. 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

அஜித்தின் ‘துணிவு’ ரிலீஸ் தேதி எப்போது? படகுழுவினர் தந்த தகவல்!