Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

கார்த்தியின் அடுத்த போலீஸ் அவதாரம் ‘தீரன் அதிகாரம் ஒன்று’

கார்த்தியின் அடுத்த போலீஸ் அவதாரம் ‘தீரன் அதிகாரம் ஒன்று’
, வியாழன், 22 டிசம்பர் 2016 (15:13 IST)
இயக்குனர் எச்.வினோத் இயக்கத்தில் புதுப் படம் ஒன்றில் ஒப்பந்தமாகியுள்ளார். போலீஸ் கதைக் கொண்ட இந்த ஆக்ஷன்  படத்தின் தலைப்பை படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளனர்.


 


அப்படத்திற்கு ‘தீரன் அதிகாரம் ஒன்று’ என்று  தலைப்பு வைத்துள்ளனர். மேலும், இது உண்மை சம்பவத்தை அடிப்படையாக வைத்து உருவாகவிருப்பதாக செய்திகள்  வெளியாகியுள்ளது.
 
இப்படத்தை ‘சதுரங்கவேட்டை’ இயக்குனர் வினோத் இயக்கவிருக்கிறார். கார்த்திக்கு ஜோடியாக ராகுல் பிரீத் சிங் நடிக்கிறார்.  இப்படத்தை டிரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம் சார்பில் எஸ்.ஆர்.பிரகாஷ் பாபு, எஸ்.ஆர்.பிரபு ஆகியோர் இணைந்து  தயாரிக்கின்றனர்.

'மாயா' பட சத்யன் சூர்யன் இப்படத்துக்கு ஒளிப்பதிவு செய்கிறார். எஸ்.ஆர்.பிரபுவின் 'ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ்'  தயாரிக்கும் இப்படத்தின் படப்பிடிப்புகள் ஜனவரி மாதம் முதல் துவங்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

யூடியூபில் முதல் 10 இடத்தை பிடித்த தமிழ் சினிமா டிரைலர்!!