காந்தாரா 2 படம் வருவது உறுதி… தயாரிப்பாளர் கொடுத்த அப்டேட்!

Webdunia
வெள்ளி, 23 டிசம்பர் 2022 (12:53 IST)
காந்தாரா படத்தின் இரண்டாம் பாகம் வருவது உறுதி என விஜய் கிரகந்தர் தெரிவித்துள்ளார்.

கடந்த செப்டம்பர் மாதம் ரிலீஸான காந்தாரா திரைப்படம் பாராட்டுகளைப் பெற்று  இந்தியா முழுவதும் வசூலில் கலக்கியது. ஆனால் இந்த திரைப்படத்தில் காடுகளில் வசிக்கும் பழங்குடி இன மக்களுக்கு எதிரான கருத்துகள் உள்ளதாக இடதுசாரியினர் கடுமையான விமர்சனங்களை வைத்தனர்.

கிட்டத்தட்ட 400 கோடி ரூபாய் அளவுக்கு வசூலித்துள்ள காந்தாரா திரைப்படம், 16 கோடி ரூபாய் பட்ஜெட்டில்தான் உருவாக்கப்பட்டது. இதனால் இந்த ஆண்டில் மிகக்குறைந்த பட்ஜெட்டில் உருவாக்கப்பட்டு அதிக லாபம் சம்பாதித்த படமாக காந்தாரா அமைந்துள்ளது எனப் பலரும் கூறிவருகின்றனர்.

இந்நிலையில் சமீபத்தில் அளித்த ஒரு நேர்காணலில் படத்தின் தயாரிப்பாளர் விஜய் கிரகந்தர் ‘காந்தாரா படத்தின் இரண்டாம் பாகம் கண்டிப்பாக வரும். அது படத்தின் தொடர்ச்சியா இல்லை கதையின் முன் பகுதியா என்பதை படத்தின் இயக்குனர் ரிஷப் ஷெட்டியுடன் விவாதித்த பின்னர் அறிவிப்போம்” எனக் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

கல்கி 2898 AD படத்தில் இருந்து தீபிகா படுகோன் நீக்கம்.. தீபிகா கேரக்டரில் யார்?

ஃபிளாப்பான படத்தை 31 வருஷம் கழிச்சு எடுத்து ஹிட்டாக்கிய ஏவிஎம் சரவணன்.. என்ன படம் தெரியுமா?

கார்த்தியின் 'வா வாத்தியாரே' பட வெளியீட்டுக்கு நீதிமன்றம் தடை! நாளை வெளியாக இருந்த நிலையில் சிக்கல்..!

என்னை வைத்து சண்டை போடுவதற்கு நீ யார்? பார்வ்தி - கம்ரூதீன் சண்டை..!

நாசமா போயிடுவீங்கடா.. அஜித் படத்தை பார்த்து மண்ணை தூற்றி சாபம் விட்ட பிரபலம்

அடுத்த கட்டுரையில்
Show comments