Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

இறுதிகட்ட படப்பிடிப்பில் ரிஷப் ஷெட்டியின் காந்தாரா 2!

இறுதிகட்ட படப்பிடிப்பில் ரிஷப் ஷெட்டியின் காந்தாரா 2!

vinoth

, புதன், 31 ஜூலை 2024 (07:53 IST)
கடந்த 2022 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் ரிலீஸான காந்தாரா திரைப்படம் பாராட்டுகளைப் பெற்று  இந்தியா முழுவதும் வசூலில் கலக்கியது. ஆனால் இந்த திரைப்படத்தில் காடுகளில் வசிக்கும் பழங்குடி இன மக்களுக்கு எதிரான கருத்துகள் உள்ளதாக இடதுசாரியினர் கடுமையான விமர்சனங்களை வைத்தனர்.

இதையடுத்து இப்போது அதன் இரண்டாம் பாகம் உருவாகி வருகிறது. இரண்டாம் பாகம் என சொன்னாலும் காந்தாரா கதையின் முன்கதைதான் படமாக்குகிறார்கள். படத்துக்கு காந்தாரா –சேப்டர் 1 எனத் தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இது பற்றி பேசிய இயக்குனர் ரிஷப் ஷெட்டி “காந்தாரா படம்தான் இரண்டாம் பாகம்.  இதற்கு பல ஆண்டுகளுக்கு முன்னர் நடக்கும் கதைதான் அடுத்த பாகத்தில் சொல்லப்பட உள்ளது. இந்த படத்தில் தெய்வத்தின் பின்னணி பற்றி சொல்லப்படும்.” எனக் கூறியிருந்தார்.

இந்த படத்தின் ஷூட்டிங் கடந்த சில மாதங்களாக இலங்கை மற்றும் கர்நாடகாவின் சில பகுதிகளில் நடந்து வரும் நிலையில் இப்போது ஷூட்டிங் இறுதிகட்டத்தை நெருங்கியுள்ளதாக சொல்லப்படுகிறது. தற்போது போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகளும் நடைபெற்று வரும் நிலையில் படம் அடுத்த ஆண்டு கோடைவிடுமுறைக்கு ரிலீஸ் ஆகும் என சொல்லப்படுகிறது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

சிகிச்சைக்காக அமெரிக்கா செல்லும் ஷாருக் கான்… என்ன பிரச்சனை?