Webdunia - Bharat's app for daily news and videos

Install App

“மிராய்” மூலம் மீண்டும் திரையில், மின்னும் வைரமாக வருகிறான், கருப்பு வாள் வீரன்- ராக்கிங் ஸ்டார் மனோஜ் மஞ்சு!!

J.Durai
செவ்வாய், 21 மே 2024 (14:36 IST)
எட்டு வருட நீண்ட இடைவெளிக்குப் பிறகு, தெலுங்கு சினிமாவின் கவர்ச்சிமுகு, இளம் நட்சத்திர நடிகர், ராக்கிங் ஸ்டார் மனோஜ் மஞ்சு வெள்ளித் திரைக்கு மீண்டும் திரும்புகிறார். 
 
சூப்பர் ஹீரோவின் பிரபஞ்சமான  மிராய் உலகில்  'தி பிளாக் வாள்'  எனும் வாள் வீரனாக அவதாரமெடுக்கிறார்இப்படத்தில் சூப்பர் யோதாவாக தேஜா சஜ்ஜா நடிக்கிறார். பிரபல படைப்பாளி கார்த்திக் கட்டமனேனி இப்படத்தை இயக்குகிறார்.
 
 பீப்பிள் மீடியா ஃபேக்டரி சார்பில் டிஜி விஸ்வ பிரசாத் இப்படத்தை பிரம்மாண்டமாக தயாரிக்கிறார்.  இணையற்ற உற்சாகம் நிறைந்த இந்த சூப்பர் ஹீரோ  பிரபஞ்சத்தில், மனோஜ் அறிமுகமாகிறார்.
 
மனோஜ்  பிறந்தநாளை கொண்டாடும் விதமாக தயாரிப்பாளர்கள் மஞ்சு மனோஜின் “தி பிளாக் வாள்” கதாப்பாத்திரத்தின் அதிரடியான ஃபர்ஸ்ட் லுக்கை வெளியிட்டுள்ளனர். இந்த ஃபர்ஸ்ட் லுக்கில் மனோஜ் மஞ்சு இதுவரை திரையில் கண்டிராத தீவிரமான மற்றும் சக்திவாய்ந்த அவதாரத்தில், ஒரு விசித்திரமான ஆயுதத்துடன், வெட்டவெளி நிலப்பரப்பின் பின்னணியில் தோற்றமளிக்கிறார்.
 
ஸ்டைலுடன் வித்தியாசமான கலவையில் தோற்றமளிக்கும் அவரது கதாபாத்திர லுக்,  பார்க்கும்போதே நம்மை மயக்குகிறது. கருப்பு வாள் வீரனாக மின்னுகிறார் மனோஜ். போனிடெயில் மற்றும் ஸ்டைலான தாடியுடன் நீண்ட கூந்தலைக் கொண்ட மனோஜ், அறிமுகக் காட்சியில் லாங் கோட் அணிந்து மிக நாகரீகமாகத் தோன்றுகிறார், அதைத் தொடர்ந்து டி-ஷர்ட்டுடன் பிளேசரில் மற்றொரு அதிரடி-சீக்வென்ஸில் தொடர்ந்து காட்சியளிக்கிறார் இது அவரது ரசிகர்களுக்கு பெரிய விருந்தாக அமைந்துள்ளது.
 
ஒரு நடிகராக அவருடைய பன்முகத் திறமையையும், அர்ப்பணிப்பையும் வெளிப்படுத்தும் இந்தப் பாத்திரம், படத்திற்கு ஒரு புதிய பரிமாணத்தைச் சேர்க்கிறது. 
 
அவரது கதாபாத்திரம் பார்வையாளர்களிடம் பெரும் தாக்கத்தை உருவாக்குமென  எதிர்பார்க்கப்படுகிறது. 
 
இது குறித்து ராக்கிங் ஸ்டார் மனோஜ் மஞ்சு கூறுகையில்..,
 
இத்தகைய சக்தி வாய்ந்த மற்றும் புதிரான கதாபாத்திரத்துடன் மீண்டும் இண்டஸ்ட்ரிக்கு வருவது சவாலாகவும், உற்சாகமாகவும் இருந்தது. "கருப்பு வாள் வீரன் என்பது வலிமை மற்றும் நெகிழ்ச்சியுடன் கூடிய  ஒரு  அழுத்தமான பாத்திரம். நான் மீண்டும் திரைக்கு திரும்பி வருவதற்கு பொறுமையாக காத்திருந்த எனது ரசிகர்களுடன் இந்த பயணத்தை பகிர்ந்து கொள்வதில் நான் மகிழ்ச்சியடைகிறேன்
 
பிரமிக்க வைக்கும்  கதைகள் நிறைந்த உலகின் பின்னணியில் அமைக்கப்பட்ட இப்படம், பாரம்பரிய வீரம் மற்றும் நவீன கதை சொல்லல் ஆகியவற்றின் கலவையாக உலகெங்கிலும் உள்ள பார்வையாளர்களை கவரும் விதத்தில் இருக்கும்.  
 
இது அசோகரின் 9 அறியப்படாத புத்தகங்களின் ரகசியங்களை ஆராய்கிறது, வரலாறு மற்றும் புராணங்களின் அடிப்படையில்  ஒரு காவியக் கதையாக அசத்தவுள்ளது என்றார்

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

’பாரதி கண்ணம்மா’ நடிகைக்கு நிச்சயதார்த்தம்.. குவியும் ரசிகர்களின் வாழ்த்துக்கள்..!

‘கருடன்’ பட நடிகருக்கு ஜோடியாக நடிக்கும் சிம்ரன்.. ஹீரோயின் சப்ஜெக்ட் படமா?

வெற்றிமாறனுக்காக இணைந்த ஜிவி பிரகாஷ் - சைந்தவி.. ஆச்சரியமான தகவல்..!

இனிது இனிது ஏகாந்தம் இனிது… கடற்கரையில் தனிமையாய் ஆண்ட்ரியா!

நஸ்ரியாவின் லேட்டஸ்ட் கார்ஜியஸ் போட்டோ ஆல்பம்!

அடுத்த கட்டுரையில்