Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

கஞ்சாகருப்பு-ஓவியா திடீர் மோதல்: பிக்பாஸின் அடுத்த ஃபிராடு ஆரம்பம்

கஞ்சாகருப்பு-ஓவியா திடீர் மோதல்: பிக்பாஸின் அடுத்த ஃபிராடு ஆரம்பம்
, புதன், 28 ஜூன் 2017 (22:30 IST)
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சி ரியாலிட்டி ஷோ இல்லை அதுவொரு சீரியல் என்பதை கூர்ந்து நோக்குபவர்கள் உணர்ந்து கொள்வார்கள். இந்த நிகழ்ச்சியில் பங்குபெறுபவர்கள் சொல்லி வைத்தால்போல் இயல்பாக பேசாமல் சொல்லிக்கொடுத்ததை பேசுவது போல் தெரிவதால் இந்த உணர்வு அனைவருக்கும் ஏற்பட்டு வருகிறது.



 
 
இந்த நிலையில் இன்றைய நாடகம் முடியும்போது கண்ணுக்கு தெரியாத இயக்குனரின் செட்டப்பின்படி ஓவியவும் கஞ்சா கருப்புவும் மோதிக்கொண்டனர். ஓவியா ஒரு கருத்தை தெரிவிக்க அதற்கு கஞ்சா கருப்பு கோபப்பட, ஓவியா அதற்கு ஷட்டப் என்று கூற என்ன ஷட்டப் என்று கஞ்சாகருப்பு எகிற  என்று ஒருவழியாக நாளைய எபிசோடுக்கான பரபரப்பை ஏற்படுத்தியாச்சு என்றே சொல்ல வேண்டும்
 
இப்படி ஒரு பிராடுத்தனம் செய்து ஒரு நிகழ்ச்சியை நடத்த வேண்டுமா? என்று நெட்டிசன்கள் தொடர்ந்து டுவிட்டரில் பதிவு செய்தாலும் விஜய் டிவி திருந்தபோவது இல்லை என்பது மட்டும் உண்மையே

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

நள்ளிரவில் ஜூலியை கட்டிப்பிடித்தது யார்? பிக்பாஸ் நிகழ்ச்சியில் பரபரப்பு