Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மூன்று கான் நடிகர்களையும் இயக்க ஆசை- கங்கனா ரனாவத்!

vinoth
வியாழன், 15 ஆகஸ்ட் 2024 (09:33 IST)
சர்ச்சை நாயகியான கங்கனா ரனாவத்  இந்திரா காந்தி வேடத்தில் எமர்ஜென்ஸி என்ற படத்தில் நடித்து இயக்கியுள்ளார். இந்த படத்தின் ஷூட்டிங் சமீபத்தில் முடிந்துள்ளது. இந்த படம் பற்றி பேசிய கங்கனா “படம் இந்திரா காந்தியின் தனிப்பட்ட வாழ்க்கை வரலாற்றுப் படமாக இல்லாமல் அரசியல் வரலாற்றுப் படமாக இருக்கும்” எனத் தெரிவித்து இருந்தார்.

மேலும் அவர் “இந்த படத்துக்கான நான் எனது அனைத்து சொத்துகளையும் அடமானம் வைத்து எடுத்துள்ளேன்.” எனக் கூறியிருந்தார். இந்த படம்  கடந்த நவம்பர் 24 ஆம் தேதி ரிலீஸ் ஆகும் என அறிவிக்கப்பட்டு இருந்தது.  ஆனால் அதன் பின்னர் தேதி ஒத்திவைக்கப்பட்டு  ஜூன் 14 ஆம் தேதி என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டிருந்தது.

ஆனால் கங்கனா தேர்தல் வேலைகளில் பிஸியாக இருந்ததால் அந்த தேதியில் இருந்து படம் தள்ளிவைக்கப்பட்டது. இந்நிலையில் இப்போது அவர் புதிய ரிலீஸ் தேதியை அறிவித்துள்ளார். அதன்படி படம் செப்டம்பர் 6 ஆம் தேதி ரிலீஸ் ஆகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் கங்கனா ரனாவத் அளித்த ஒரு நேர்காணலில் “நான் பல்வேறு நடிகர்களோடும் இணைந்து பணியாற்ற ஆசைப்படுகிறேன். மூன்று கான் நடிகர்களையும் (அமீர் கான், சல்மான் கான், ஷாருக் கான்) எனது இயக்கம் மற்றும் தயாரிப்பில் நடிக்க வைக்க ஆசை. அவர்களால் மக்கள் திரளுடன் ஒன்ற முடியும். அவர்களால் சமூகத்தில் மிகப்பெரிய மாற்றங்களை உருவாக்க முடியும். எனக்கு மிகவும் பிடித்த இர்பான் கானை இயக்க முடியவில்லையே என்ற வருத்தம் உள்ளது” எனக் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

ஆஸ்கர் விருதில் புதிய பிரிவு! முதல் விருது எனக்குதான்! சீட் போட்டு வைத்த ராஜமௌலி!

சிக்கந்தர் படத்தின் தோல்வி சிவகார்த்திகேயனின் ‘மதராஸி’ படத்தைப் பாதிக்குமா?

பெயர் தெரியாத கோழைகளே..உங்களுக்காகப் பரிதாபப் படுகிறேன் – த்ரிஷா கோபப் பதிவு!

விஜய் சேதுபதி படத்தில் இணைந்த பாலிவுட் ஹீரோயின்… அதிகாரப்பூர்வமாக அறிவித்த படக்குழு!

அஜித்தை வைத்து ஒரு படம் இயக்க ஆசை… பேன் இந்தியா ஹிட் கொடுத்த இயக்குனர் விருப்பம்!

அடுத்த கட்டுரையில்
Show comments