Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கந்து வட்டி கொடுமை; இதயம் வலிக்கிறது - நடிகை ராதிகா சரத்குமார் ட்வீட்

Webdunia
செவ்வாய், 24 அக்டோபர் 2017 (14:05 IST)
நெல்லையில் கந்துவட்டி கொடுமை காரணமாக ஒரே குடும்பத்தை சேர்ந்த தம்பதி மற்றும் இரு குழந்தைகள் நேற்று நெல்லை கலெக்டர் அலுவலகத்தில் தீக்குளித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அதில், சிகிச்சை பலனின்றி இரு குழந்தைகளும்,  குழந்தைகளின் தாய் சுப்புலட்சுமியும் மரணம் அடைந்தனர். சுப்புலட்சுமியின் கணவர் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

 
நெல்லை கலெக்டர் அலுவலகம் முன் ஒரு குடும்பம் தீக்குளித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தந்தையை தவிர தாயும், குழந்தைகளும் பலி. தீயை அணைக்க மண்ணை தவிர எதுவும் இல்லை. இதயம் வலிக்கிறது என்று ராதிகா சரத்குமார்  ட்வீட்டியுள்ளார்.

 
தொகுப்பாளினி டிடி தன்னுடைய கருத்தை பதிவிட்டுள்ளார். அதில், அவர்கள் செய்யாத தவறுக்கு உயிருடன் எரிக்கப்பட்டுள்ளனர். அந்த குழந்தைகள் அடைந்த வேதனையை நினைத்தால் தூங்க முடியவில்லை என்று கூறியுள்ளார்.



 
ராதிகா ட்வீட்டை பார்த்த காயத்ரி ரகுராம் கவலை அளிப்பதாக தெரிவித்துள்ளார். மேலும் பட்டப்பகலில் விசாகப்பட்டினத்தில் 23 வயது வாலிபர் ஒரு பெண்ணை பலாத்காரம் செய்துள்ளார். இந்த உலகம் எங்கே போகிறது? ஆட்டோ டிரைவர் அதை தடுக்காமல் வீடியோ எடுத்துள்ளது வேதனை அளிப்பதாக உள்ளது என கூறியுள்ளார் காயத்ரி ரகுராம்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

சிம்புவின் 51வது படத்தின் அறிவிப்பு.. துள்ளி குதிக்கும் ரசிகர்கள்..!

சுமார் 3 நிமிட ’விடாமுயற்சி’ வீடியோ.. படப்பிடிப்பின் போது இவ்வளவு சவால்களா?

ஒபன் ஆனதுமே விற்று தீரும் ‘விடாமுயற்சி’ டிக்கெட்டுகள்! திருவிழாவுக்கு தயாராகும் ரசிகர்கள்!

பஞ்சு மிட்டாய் ட்ரஸ்ஸில் க்யூட் போஸ் கொடுத்த திவ்யபாரதி!

பிக்பாஸ் ரைசாவின் லேட்டஸ்ட் கார்ஜியஸ் போட்டோஷூட்!

அடுத்த கட்டுரையில்
Show comments