Webdunia - Bharat's app for daily news and videos

Install App

உயிரே உறவே தமிழே...கமல்ஹாசன் பிரமாண்ட மாநாட்டுக்கு அழைப்பு !!

Webdunia
ஞாயிறு, 14 பிப்ரவரி 2021 (00:03 IST)
நடிகர் கமல்ஹாசன் தனது சமூக வலைதளப் பக்கத்தில் ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், மார்ச் 8 ஆம் தேதி மகளிர் தினம் அன்று பெண்கள் சக்தி என்ற தலைப்பில் பெண்மையைப் போற்றும் பெருநிகழ்வு காட்டாங்குளத்தூரி உள்ள எஸ்.ஆர்.எம். பலகலைக்கழக அரங்கில் நடைபெறும் எனத் தெரிவித்துள்ளார்.

மேலும், இதுகுறித்து தனது அறிக்கையில் அவர் கூறியுள்ளதாவது:

’சீரமைப்போம் தமிழகத்தை ’என்ற பொருண்மையில் நமது கட்சியின் மாநில மாநாடு பிப்ரவரி 21 ஆம் தேதி நடத்த திட்டமிட்டிருந்தோம். ஆனால் காவல்துறை இதுவரை அனுமதி கொடுக்கவில்லை.அதனால் மாநாட்டு நிகழ்வை மார்ச் 7 ஆம் தேதி ஒத்தி வைக்கிறோம்.

பிப்ரவரி 21 ஆம்தேதி மக்கள் நீதி மய்யத்தின் 4 ஆம் ஆண்டு விழா சென்னை மேற்கு தாம்பரத்தில் உள்ள சாய்ராம் பொறியியல் கல்லூரி வளாகத்தில் விமரிசையாக நடைபெறும்.மார்ச் 7 ஆம் தேதி ’சீரமைப்போம் தமிழகத்தை’மக்கள் நீதி மய்யத்தில் மாபெரும் தேர்தல் மாநாடு வண்டலூர் ஓரகடம் சாலையில் உள்ள மன்னிவாக்கத்தில் நடைபெறும்.

மார்ச் 8 ஆம் தேதி மகளிர் தினம் அன்று பெண்கள் சக்தி என்ற தலைப்பில் பெண்மையைப் போற்றும் பெருநிகழ்வு காட்டாங்குளத்தூரி உள்ள எஸ்.ஆர்.எம். பலகலைக்கழக அரங்கில் நடைபெறும் எனத் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

ரித்திகா சிங்கின் லேட்டஸ்ட் ஸ்டன்னிங் லுக் போட்டோஷூட் ஆல்பம்!

ஸ்கின் கலர் ட்ரஸ்ஸில் ஜான்வி கபூரின் கார்ஜியஸ் போட்டோஷூட் ஆல்பம்!

சுதா கொங்கரா & துருவ் விக்ரம் படத்தை தயாரிப்பது யார்? வெளியான தகவல்!

ரி ரிலீஸ் பட்டியலில் இணைந்த சூர்யா & தனுஷின் சூப்பர்ஹிட் படங்கள்!

நயன்தாராவின் மலையாள பட பூஜை புகைப்படங்கள்… இணையத்தில் வைரல்!

அடுத்த கட்டுரையில்
Show comments