Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

கமல்ஹாசன் தனது ரசிகர் மன்ற தலைவர்களுடன் திடீர் சந்திப்பு!!

கமல்ஹாசன் தனது ரசிகர் மன்ற தலைவர்களுடன் திடீர் சந்திப்பு!!
, ஞாயிறு, 5 மார்ச் 2017 (14:32 IST)
நடிகர் கமல்ஹாசன் தனது ரசிகர் மன்ற நிர்வாகிகளுடன் இன்று திடீர் ஆலோசனை நடத்தினார்.


 
 
தமிழகத்தில் நிலவும் அரசியல் சூழ்நிலை குறித்து அவ்வப்போது டிவிட்டரில் கருத்து தெரிவித்து வருகிறார் கமல். தொடர்ச்சியாக அதிமுக பொதுச்செயலாளர் சசிகலா மற்றும் தற்போதைய தமிழக அரசுக்கு எதிராக பல்வேறு கருத்துக்களை டிவிட்டர் மற்றும் ஊடகங்கள் மூலமாகவும் தெரிவித்து வருகிறார்.
 
இதனால், புதுக்கோட்டை மாவட்ட கமல்ஹாசன் ரசிகர் மன்ற தலைவர் சுதாகர் போலீசாரால் கைது செய்யப்பட்டார். இதனை எதிர்த்து கமல், இது அரசியல் பழிவாங்கும் செயல் என்றும் விமர்சித்தார்.
 
இந்நிலையில், சென்னை எல்டாம்ஸ் சாலையிலுள்ள தனது வீட்டில் ரசிகர் மன்ற நிர்வாகிகளுடன் தீவிர ஆலோசனை நடத்தினார். இதில் ரசிகர் மன்ற வழக்கறிஞர்களும் கலந்து கொண்டதாக தெரிகிறது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

சுசித்ரா வீடியோ லீக்ஸ்: தனுஷ் கூறியது என்ன??