Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நீதிமன்றத்தில் மன்னிப்பு கேட்க மறுத்த கமல்.. ‘தக்லைஃப்’ ரிலீஸ் தேதி ஒத்திவைப்பு..!

Mahendran
செவ்வாய், 3 ஜூன் 2025 (15:52 IST)
மன்னிப்பு கேட்க வேண்டும் என்று கமல்ஹாசனுக்கு கர்நாடக உயர்நீதிமன்றம் அறிவுறுத்தியிருந்த நிலையில், மன்னிப்பு கேட்காத கமல்ஹாசன், கர்நாடகத்தில் மட்டும் ரிலீஸ் தேதியை ஒரு வாரம் ஒத்திவைப்பதாக அறிவித்துள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளன.
 
“தமிழிலிருந்து தான் கன்னடம் பிறந்தது,” என்று கமல்ஹாசன் பேசியதை அடுத்து, ‘தக்லைஃப்’ வெளியீடு கர்நாடக மாநிலத்தில் சிக்கல் ஆனது. இதை அடுத்து, கமல்ஹாசன் ‘தக்லைஃப்’ படத்தை ரிலீஸ் செய்ய அனுமதிக்குமாறு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.
 
ஆனால், “நீங்கள் என்ன மொழி ஆராய்ச்சியாளரா? தமிழிலிருந்து தான் கன்னடம் பிறந்தது என்பதை எப்படி உங்களுக்கு தெரியும்? எனவே மன்னிப்பு கோரி விட்டு பிரச்சனை முடியுங்கள்,” என கர்நாடக aஇகோர்ட் நீதிபதி தெரிவித்தார்.
 
தன்னுடைய கன்னடம் குறித்த கருத்து தவறாக புரிந்து கொள்ளப்பட்டதாகவும், அதனால் வருத்தம் அளிப்பதாகவும் கமல் கடிதம் எழுதியிருந்தாலும், அவரது விளக்கம் ஏற்று கொள்ளத்தக்கது அல்ல என்று நீதிபதி குறிப்பிட்டார்.
 
“மன்னிப்பு கேட்க சொன்னால் ஏன் சுற்றி வளைத்து பேசுகிறீர்கள்? மன்னிப்பு கேட்பதில் அப்படி என்ன ஈகோ?” என்று கர்நாடக உயர்நீதிமன்றம் கமல் தரப்பிடம் கேள்வி எழுப்பியது.
 
மேலும், கன்னட பிலிம் சேம்பரிடம் பேசுமாறு கமல் தரப்புக்கு அறிவுரை வழங்கி, வழக்கு விசாரணையை நீதிபதி ஒத்திவைத்தார்.
 
இதனால், கர்நாடக மாநிலத்தில் மட்டும், ஒரு வாரத்திற்கு ‘தக்லைஃப்’ திரைப்படம் ரிலீஸ் ஒத்திவைக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

நீதிமன்றத்தில் மன்னிப்பு கேட்க மறுத்த கமல்.. ‘தக்லைஃப்’ ரிலீஸ் தேதி ஒத்திவைப்பு..!

பிரியா வாரியரின் லேட்டஸ்ட் ஹாட் & க்யூட் புகைப்படங்கள்!

திஷா பதானியின் லேட்டஸ்ட் கார்ஜியஸ் க்ளிக்ஸ்!

என் கருத்து தவறாக புரிந்து கொள்ளப்பட்டுள்ளது: கர்நாடக திரைப்பட வர்த்தக சபைக்கு கமல் கடிதம்..!

ஜனநாயகன் படப்பிடிப்பு நிறைவு.. விஜய் பிறந்த நாளில் முக்கிய அப்டேட்..!

அடுத்த கட்டுரையில்
Show comments