Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

ஜெயம் ரவியின் அடுத்த படத்தை இயக்குவது இவர்தான்: அதிகாரபூர்வ அறிவிப்பு!

ஜெயம் ரவியின் அடுத்த படத்தை இயக்குவது இவர்தான்: அதிகாரபூர்வ அறிவிப்பு!
, வெள்ளி, 1 ஜனவரி 2021 (19:27 IST)
ஜெயம் ரவி நடிக்க இருக்கும் அடுத்த 3 படத்தை ஸ்க்ரீன்சீன் நிறுவனம் தயாரிக்க உள்ளதாக ஏற்கனவே செய்திகள் வெளிவந்த நிலையில் தற்போது அந்த செய்தி உறுதி செய்யப்பட்டுள்ளது 
 
ஜெயம் ரவி நடிக்கும் அடுத்த படத்தை ஸ்கிரீன்சீன் நிறுவனம் தயாரிக்க இருப்பதாகவும் கல்யாண கிருஷ்ணன் என்பவர் இந்த படத்தை இயக்க இருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்த போஸ்டர் ஒன்றையும் ஸ்கிரீன்ஸ் இந்நிறுவனம் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது. மேலும் இந்த படம் குறித்த விபரங்கள் விரைவில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை அடுத்து ஜெயம் ரவியின் அடுத்த படம் எது என்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது 
 
ஏற்கனவே ஜெயம் ரவி நடித்த பூமி திரைப்படம் வரும் பொங்கல் தினத்தில் ஹாட்ஸ்டாரில் வெளியாக உள்ளது என்பது தெரிந்ததே. அதேபோல் அவர் நடித்து வரும் பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்க உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது


Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

’கர்ணன்’ பர்ஸ்ட்லுக் எப்போது? தனுஷ் டுவீட்!