Webdunia - Bharat's app for daily news and videos

Install App

விமர்சகர்கள் மேல் வழக்குப் பதிவு செய்த கல்கி படக்குழு… 25 கோடி நஷ்ட ஈடு தரணுமாம்!

vinoth
வெள்ளி, 19 ஜூலை 2024 (07:58 IST)
பிரபாஸ், கமல்ஹாசன், அமிதாப் பச்சன், தீபிகா படுகோன், திஷா பதானி உள்ளிட்ட பலர் நடித்துள்ள கல்கி திரைப்படத்தை வைஜெயந்தி மூவிஸ் தயாரிக்க நாக் அஸ்வின் இயக்கியுள்ளார். இரண்டு பாகங்களாக உருவாகும் இந்த படத்தின் முதல் பாகம் ஜூன் 27 ஆம் தேதி உலகம் முழுவதும் ரிலீஸாகியுள்ளது.

கலவையான விமர்சனங்களைப் பெற்றாலும் இந்த படம் நல்ல வசூலை தொடக்கம் முதலே பெற்று வந்தது. இந்நிலையில் இப்போது 1000 கோடி ரூபாய் வசூலைத் தாண்டியுள்ளதாக படக்குழுவினர் அறிவித்துள்ளனர். இதன் மூலம் பிரபாஸ் பாகுபலி 2 படத்துக்குப் பிறகு இரண்டாவது முறையாக 1000 கோடி ரூபாய் வசூலைக் கொடுத்த முதல் தென்னிந்திய ஹீரோ என்ற பெருமையைப் பெற்றுள்ளார்.

ஆனால் இந்த வசூல் விவரங்கள் தயாரிப்பாளர்களால் இட்டுக்கட்டி சொல்லப்படுவதாக விமர்சகர்கள் சிலர் சமூகவலைதளங்களில் பதிவிட்டு வந்தனர். இந்நிலையில் இப்படி தெரிவித்த மும்பையைச் சேர்ந்த சுமித் கடேல் மற்றும் ரோஹித் ஜெய்ஸ்வால் அகியோர் மீது கல்கி படக்குழு வழக்குப் பதிவு செய்துள்ளது. அவர்கள் தங்கள் கருத்துக்கு விளக்கமளிக்க வேண்டும் அல்லது 25 கோடி ரூபாய் நஷ்ட ஈடு தரவேண்டும் என்று அதில் தெரிவித்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

ஆகஸ்ட்டில் தொடங்குகிறதா கமல் - அன்பறிவ் படப்பிடிப்பு.. வாய்ப்பே என சொல்லும் படக்குழு..!

ரஜினியின் ‘கூலி’ படத்தில் கமல் மகள் மட்டுமல்ல.. கமலும் இருக்கின்றாரா? ஆச்சரிய தகவல்..!

நான் விரும்பிப் பாடவில்லை… இயக்குனர்கள்தான் வற்புறுத்துகிறார்கள் –அனிருத் பகிர்ந்த சீக்ரெட்!

தனுஷுடன் நான் இணையும் படம் மைல்கல்லாக இருக்கும்… மாரி செல்வராஜ் நம்பிக்கை!

ப்ரதீப் ரங்கநாதனின் LIK ரிலீஸ் தாமதம்… காரணம் என்ன?

அடுத்த கட்டுரையில்
Show comments