Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அஜித்தை வாழ்த்திய இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமார்

Webdunia
புதன், 10 ஜனவரி 2018 (13:55 IST)
‘ஜெய் சிம்ஹா’ தெலுங்குப் படத்தின் புரமோஷன் விழாவில் அஜித்தைப் பற்றி பெருமையாகப் பேசியுள்ளார் இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமார்.
 
நந்தமுரி பாலகிருஷ்ணா நடிப்பில் கே.எஸ்.ரவிக்குமார் இயக்கியுள்ள படம் ‘ஜெய் சிம்ஹா’. நயன்தாரா ஹீரோயினாக நடித்துள்ள இந்தப் படம், வருகிற 12ஆம் தேதி ரிலீஸாக இருக்கிறது. எனவே, புரமோஷன் நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு வருகின்றனர் படக்குழுவினர்.
 
ஒரு நிகழ்ச்சியில் பேசிய கே.எஸ்.ரவிக்குமார், “இதுவரை பல நடிகர்களுடன் பணியாற்றி இருக்கிறேன். ஆனால், தங்களின் ஸ்டார் வேல்யூவுக்கு ஏற்ப எல்லாருமே டயலாக் அல்லது சில ஸீன்களை மாற்றச் சொல்வார்கள். அதை, தவறு என்றும் சொல்ல முடியாது. என்னிடம் எந்த மாற்றமுமே சொல்லாத நடிகர்கள் இருவர் மட்டுமே... ஒருவர் பாலையா, மற்றொருவர் அஜித்” எனத் தெரிவித்துள்ளார். 
 
கே.எஸ்.ரவிக்குமார் பகிர்ந்துள்ள இந்த விஷயம், அஜித் ரசிகர்களைக் குஷிப்படுத்தியுள்ளது. கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் ‘வில்லன்’ மற்றும் ‘வரலாறு’ ஆகிய படங்களில் நடித்துள்ளார் அஜித். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

பாதி சம்பளம் கொடுத்து ஏமாற்றிய மார்வெல்! விடைபெறும் சூப்பர்ஹீரோ நடிகர்! - அதிர்ச்சியில் ரசிகர்கள்!

நானியின் ஹிட் 3.. சூப்பர் ஹிட்..! 3 நாட்களுக்குள் வசூலை வாரி குவித்த சம்பவம்!

முகலாயர்கள் பாடங்களை நீக்கிய NCERT! ஏன் இதை செய்யல? - நடிகர் மாதவன் கேள்வி!

”யோகி பாபு பண்றதுலாம் கேவலமான விஷயம்” தயாரிப்பாளர் கடும் குற்றச்சாட்டு! - இயக்குநர் ரியாக்‌ஷன் என்ன?

மாரி செல்வராஜ் - துருவ் விக்ரம் நடிக்கும் ‘பைசன் காளமாடன்’ ரிலீஸ் தேதி அறிவிப்பு!

அடுத்த கட்டுரையில்
Show comments