Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

நியாபகம் இருக்கிறதா இந்த குட்டிப்பாப்பாவை… இப்போது என்ன செய்கிறார் தெரியுமா?

நியாபகம் இருக்கிறதா இந்த குட்டிப்பாப்பாவை… இப்போது என்ன செய்கிறார் தெரியுமா?
, செவ்வாய், 16 ஜூன் 2020 (08:11 IST)
சூர்யா மற்றும் ஜோதிகா நடித்த ஜில்லுன்னு ஒரு காதல் படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்த ஸ்ரேயா சர்மா இப்போது வழக்கறிஞராக தொழில் செய்து வருகிறார்.

சூர்யா மற்றும் ஜோதிகா கடைசியாக இணைந்து நடித்த படம் ஜில்லுனு ஒரு காதல். அந்த படத்துக்குப் பின்னர் அவர்கள் இருவரும் திருமணம் செய்துகொண்டனர். இந்த படம் 2006 ஆம் ஆண்டு வெளியானது. இந்த படத்தில் சூர்யா மற்றும் ஜோதிகா தம்பதிகளின் மகளாக நடித்தவர் ஸ்ரேயா சர்மா. தனது குறும்பான நடிப்பால் ரசிகர்கள் மத்தியில் இவர் இடம் பிடித்தார். அதன் பின்னர் சில படங்களில் நடித்த அவர் திரையுலகை விட்டு விலகி இருந்தார்.

இந்நிலையில் இப்போது இவர் வளர்ந்து வழக்கறிஞர் படிப்பை முடித்துள்ளார். மேலும் தனது கவர்ச்சியான புகைப்படங்களை சமூகவலைதளங்களில் வெளியிட்டு வருகிறார். ரசிகர்கள் பலர் குழந்தையாக இருந்தவரா இவ்வளவு பெரிய பெண்ணாக வளர்ந்துவிட்டார் என ஆச்சர்யப்பட்டு வருகின்றனர். வழக்கறிஞராக இருந்தாலும் சினிமா வாய்ப்புகள் வந்தால் நடிக்க தயாராக இருக்கிறாராம ஸ்ரேயா சர்மா.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

அஜித் பட தயாரிப்பாளருக்குக் கிடைத்த முக்கிய பதவி – திரையுலகினர் வாழ்த்து!