Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பாலியல் வன்கொடுமை வழக்கு! நடன இயக்குநர் ஜானி மாஸ்டர் தலைமறைவா?

Siva
செவ்வாய், 17 செப்டம்பர் 2024 (10:10 IST)
பிரபல திரைப்பட நடன இயக்குநர் ஜானி மீது பாலியல் வன்கொடுமை குற்றச்சாட்டு பதிவான நிலையில் அவர் தலைமறைவாகியுள்ளதாக கூறப்படுகிறது.

தமிழ், தெலுங்கு, ஹிந்தி மொழிகளில் முன்னணி நட்சத்திரங்களுக்காக நடனம் அமைத்தவர் ஜானி மாஸ்டர்.  இவர் மீது 21 வயதான உதவி நடன இயக்குநர் பாலியல் புகார் செய்துள்ளார்.

அவர் அளித்த புகாரின் அடிப்படையில், காவல் நிலையத்தில் இந்திய தண்டனைச் சட்டத்தின் கீழ், தொடர்ச்சியான பாலியல் வன்கொடுமை (விவகாரம் 376), கொலை மிரட்டல் (விவகாரம் 506), மற்றும் உடல் துன்புறுத்தல் (விவகாரம் 323) ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த புகாரில், "நான் ஜானி மாஸ்டரின் உதவி இயக்குநராக 6 மாதங்கள் பணியாற்றினேன். படப்பிடிப்புகளின் போது பல இடங்களில் அவரால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டேன். 2017-ம் ஆண்டு ஹைதராபாத்தில் உள்ள எனது வீட்டிற்கு வந்த அவர், தொடர்ந்து மிரட்டி, மீண்டும் பாலியல் இச்சைகளுக்காக துன்புறுத்தினார்" என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த நிலையில் ஜன சேனா கட்சியில் இருந்து ஜானி மாஸ்டர் நீக்கப்பட்ட நிலையில் தற்போது அவர் தலைமறைவாகி இருப்பதாகவும், அவரை காவல்துறையினர் தேடி வருவதாகவும் கூறப்படுகிறது.

Edited by Siva
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

2025 ஆம் ஆண்டிலும் ஷாருக் கான் படம் ரிலிஸாகாதா?... கிங் படத்தின் ரிலீஸ் எப்போது?

100 கோடி ரூபாய் வசூல் க்ளப்பில் இணைந்த நானியின் ‘சரிபோதா சனிவாரம்’!

வாழை படத்தின் க்ளைமேக்ஸில் அந்த டீச்சர் என்ன ஆனார்?... இயக்குனர் மாரி செல்வராஜ் கொடுத்த பதில்!

விபத்தில் சிக்கியவர்களை இஸ்லாமிய மக்கள் காப்பாற்றினார்கள்… வாழை மேடையில் நன்றி தெரிவித்த மாரி செல்வராஜ்!

எம் எஸ் சுப்புலட்சுமியின் பயோபிக்கில் நடிக்கிறாரா வித்யா பாலன்?

அடுத்த கட்டுரையில்