Webdunia - Bharat's app for daily news and videos

Install App

20 கோடியில் போய்ஸ் கார்டனில் ஜெயம் ரவியின் புது வீடு – எப்படித் தெரியுமா ?

Webdunia
திங்கள், 25 பிப்ரவரி 2019 (17:28 IST)
சென்னையில் ரஜினிகாந்த் வசிக்கும் போயஸ்கார்டன் ஏரியாவில் புதிதாக ஒரு வீட்டை வாங்கியுள்ளார் ஜெயம் ரவி.

சென்னையின் மையப்பகுதியில் இருக்கும் போயஸ் கார்டன் பகுதி வி.வி.ஐ,பி.கள் வசிக்கும் பகுதி. அங்கு சினிமா நடிகர்களுக்கே வீடு கிடைப்பது கஷ்டம். அதேப் போல அந்த ஏரியாவில் காலி மனைகளும் கிடையாது. அதனால் புதிதாக யாரும் அங்கு மனை வாங்கி வீடு கட்டவும் முடியாது. இதனால் எவ்வளவுதான் பணமும் ஆசையும் இருந்தாலும் அந்த ஏரியாவில் வீடு வாங்குவது குதிரைக் கொம்புதான்.

ஆனால் நடிகர் ஜெயம் ரவி இப்போது அங்கு சுமார் 20 கோடி மதிப்பிலான தனி வீடு ஒன்றை வாங்கியுள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது. ஸ்கிரீன் சீன் நிறுவனம் எனும் வரிசையாக ஜெயம் ரவி நடிக்கும் 3 படங்களைத் தயாரிக்க ஒப்பந்தமாகியுள்ளது. இந்த மூன்று படங்களில் நடிக்க ஜெயம் ரவிக்குப் பேசப்ப்பட்ட சம்பளம் எதுவும் கிடையாதாம்.

அதற்குப் பதிலாக அந்த நிறுவனத்திற்கு சொந்தமான போயஸ் கார்டனில் இருக்கும் வீடி ஜெயம் ரவிக்கு அளிக்கப்பட்டுள்ளதாம். தனது நீண்டநாள் ஆசைக்காக ஜெயம் ரவி இப்போது அந்தக் கம்பெனிக்கு வரிசையாக மூன்று படங்களுக்கு கால்ஷீட் கொடுத்துள்ளதாகத் தெரிகிறது.

ஜெயம் ரவி நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான டிக் டிக் டிக் மற்றும் அடங்கமறு ஆகியப் படங்கள் சிறப்பான வரவேற்பைப் பெற்றன என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

விஜய்சேதுபதியா? சூர்யாவா? ராஜ்கமல் நிறுவனத்தின் அடுத்த பட ஹீரோ யார்?

அட்லி - அல்லு அர்ஜூன் படத்தின் கதை இந்த கதையில் இருந்து சுட்டதா? நெட்டிசன்கள் கிண்டல்..!

கர்நாடகாவில் 20 கோடி நஷ்டம் மட்டுமல்ல.. இன்னும் ஒரு 30 கோடி நஷ்டம்.. கமல் அதிர்ச்சி..!

’தக்லைஃபில்’ விட்டதை ‘கூலி’யில் எடுக்கனும்.. ரிலீஸ் உரிமை பெற போட்டி போடும் விநியோகிஸ்தர்கள்..!

’தக்லைஃப்’ படத்தை எடுக்க வேண்டாம் என சுஹாசினி சொன்னாரா? பரபரப்பு தகவல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments