Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

திரைப்படமாகும் சரவணபவன் சர்ச்சை ஜீவஜோதியின் வாழ்க்கை!

திரைப்படமாகும் சரவணபவன் சர்ச்சை ஜீவஜோதியின் வாழ்க்கை!
, புதன், 7 ஜூலை 2021 (16:41 IST)
சரவணபவன் உரிமையாளர் மேல் தன் கணவன் கொலை வழக்கில் சட்டப்போராட்டம் நடத்திய ஜீவஜோதியின் சட்டப்போராட்டம் திரைப்படமாக உள்ளது.

தமிழகம் முழுவதும் பிரபலமான வழக்கான சரவணபவன் ராஜகோபால் – ஜீவஜோதி – பிரின்ஸ் சாந்தகுமார் வழக்கு கடந்த ஆண்டு இறுதியில் தீர்ப்பளிக்கப்பட்டது. ஜீவஜோதியின் கணவரைக் கொன்றதற்காக சரவண பவன் உரிமையாளர் ராஜகோபாலுக்கு ஆயுள் தண்டனை வழங்கப்பட்டது.

ஆனால் சிறை சென்ற சில வாரங்களிலேயே உடல்நலக் கோளாறு காரணமாக அவர் உயிரிழந்தார். வழக்கு நடந்த காலங்களில் தஞ்சாவூரில் தங்கி தையல் பயிற்சி நிறுவனம் ஒன்றை நடத்திவந்த ஜீவஜோதி சில மாதங்களுக்கு முன்னர் அவரது உறவினர் கருப்பு முருகானந்தத்தின் சிபாரிசால் பாஜகவில் தன்னை இணைத்துக்கொண்டார்.

இந்நிலையில் இப்போது பாலிவுட்டின் முன்னணி தயாரிப்பு நிறுவனம் ஒன்று ஜீவஜோதியின் சட்டப்போராட்டத்தை திரைப்படமாக எடுக்க முடிவு செய்து அதற்கான திரைக்கதை அமைக்கும் பணிகளை இப்போது செய்துவருகிறது. விரைவில் இயக்குனர் மற்றும் நடிகர் நடிகைகள் பற்றி விவரம் அறிவிக்கப்படலாம் எனத் தெரிகிறது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ராகுல் காந்தி வருகைக்கு பின்னரே சப்ஸ்க்ரைபர் எண்ணிக்கை அதிகமானது! வில்லேஜ் குக்கிங் சேனல்