Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

தனது வாரிசை களமிறக்கும் ஜெயம் ரவி!!

தனது வாரிசை களமிறக்கும் ஜெயம் ரவி!!
, வியாழன், 10 நவம்பர் 2016 (15:49 IST)
ஜெயம் ரவி தந்து மகன் ஆரவ்-வை நடிக்க வைக்க உள்ளதாக அதிகாரபூர்வமான அறிவிப்பு வெளியாகி உள்ளது.


 
 
விஜய் தனது மகன் சஞ்சய்யை வேட்டைகாரன் படத்தின் அறிமுக பாடலின் இறுதியில் சிறிது நேரம் நடனம் ஆட வைத்திருந்தார். அவரைத் தொடர்ந்து தற்போது ஜெயம் ரவியும் தனது மகனை சினிமாவுக்கு அறிமுகப்படுத்துகிறார். 
 
ஜெயம் ரவி தற்போது நடிக்கவிருக்கும் ‘டிக் டிக் டிக்’ படத்தில் ஜெயம் ரவியின் மூத்த மகன் ஆரவ் நடிக்கவிருக்கிறார். 
 
இப்படத்தை ‘மிருதன்’ படத்தை இயக்கிய சக்தி சௌந்தர்ராஜன் இயக்குகிறார். இப்படத்தின் நாயகியாக நிவேதா பெத்துராஜ் நடிக்கிறார். நேமிசந்த் ஜபக் புரொடக்ஷன்ஸ் நிறுவனம் இப்படத்தை பிரம்மாண்டமாக தயாரிக்கிறது. டி.இமான் இசையமைக்கவிருக்கிறார்.

விண்வெளி சம்பந்தப்பட்ட கதையை மையமாக வைத்து இப்படத்தை எடுக்கவிருக்கிறார்கள் என செய்திகள் தெரிய வந்துள்ளது.

 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

தமிழ் சினிமாவின் டாப் கான்ட்ரவர்சிகள்