Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

தமிழ் சினிமாவின் டாப் கான்ட்ரவர்சிகள்

தமிழ் சினிமாவின் டாப் கான்ட்ரவர்சிகள்
, வியாழன், 10 நவம்பர் 2016 (11:51 IST)
தன்னைத்தானே நாடு கடத்துவது என்று அறிவித்த டாப் நடிகர் சொன்னதை செய்யப் போகிறார். வெளிநாட்டில் போய் குடியேறப் போகிறாரா என்று பதற வேண்டாம். பக்கத்தில்தான் குடியேறப் போகிறார், ஆனால், சென்னைக்கு வெளியே.


சென்னையிலிருந்து சுமார் 75 கிலோ மீட்டர்கள் தொலைவில் மிகப்பெரிய இடம் வாங்கிப் போட்டிருப்பவர் அங்கு வீட்டுடன் ஸ்டுடியோவுக்கான செட்டப்பையும் ஏற்படுத்தி வருகிறார். இந்த புராஜெக்ட் நல்லபடியாக முடிந்தால் அவர் சென்னை ஸ்டுடியோவுக்கு வரவேண்டியதில்லை. சென்னை போக்குவரத்தில் நசுங்க வேண்டியதுமில்லை. முழுப்படத்தையும் தனது ஸ்டுடியோ செட்டப்புக்குள்ளாலேயே எடுத்துவிடலாம்.

இந்த மாபெரும் திட்டத்துக்காகத்தான் அவர் சமீபமாக அதிக படங்களில் நடித்து பணம் சம்பாதித்தார் என்கிறார்கள்.

உச்ச நடிகரின் இளைய மகள் தனது புதிய படத்துக்கு நிலவை மையப்படுத்திய பாடல் வரியை பெயராக வைத்திருந்தார். அதனை தற்போது விஐபி 2 என மாற்றியுள்ளனர். உச்சத்தின் மூத்த மருகன்தான் நாயகன். அவரது நிறுவனம்தான் படத்தை தயாரிக்கிறது.

விஐபி படம் வந்த போது உச்சத்தின் வீட்டில் பெரும் குழப்பம் நிலவுகிறது என்று விவரம் அறிந்தவர்கள் கூறினர். காரணம், விஐபி படத்தில் வில்லனின் பெயர், உச்சத்தின் இரண்டாவது மருமகனின் பெயர். அதாவது உச்சத்தின் இளைய மகனின் கணவரின் பெயர். இரண்டாவது மருமகன் செய்யும் அதே ரியல் எஸ்டேட் தொழிலைத்தான் விஐபி வில்லனும் படத்தில் செய்வதாக காட்டியிருந்தனர். உன் அப்பாவின் பணம் இல்லையென்றால் நீ வெறும் ஜீரோ என்று வில்லனை நாயகன் கலாயக்கும் காட்சிகளும், வில்லனை அமுல்பேபி போல் நடத்தும் காட்சிகளும் படத்தில் இடம்பெற்றிருந்தன.

இவையெல்லாம் ஒல்லி நடிகர் தனது சகலையை நேரடியாக தாக்குவது என்று படம் வெளிவந்த போது விமர்சிக்கப்பட்டது. தற்போது உச்சத்தின் இரண்டாவது மகளும், அவரது கணவரும் பிரிந்து வாழும் நிலையில், உச்சத்தின் மகள் எடுக்கும் படத்துக்கு விஐபி 2 என்று திடீரென்று பெயர் வைத்துள்ளனர்.

அப்படியானால் விஐபி 2 படத்தில் மீண்டும் வில்லனாக இரண்டாவது மருமகனை காண்பிக்கப் போகின்றனரா? கலாயக்கப் போகிறார்களா? செம சீன் காத்திட்டிருக்கு.
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

மோடியால் கோடம்பாக்கத்தில் முராரி ராகம்