Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

ஜெயம் ரவிக்காக களத்தில் இறங்கிய கல்யாண கிருஷ்ணன்

ஜெயம் ரவிக்காக களத்தில் இறங்கிய கல்யாண கிருஷ்ணன்

ஜெயம் ரவிக்காக களத்தில் இறங்கிய கல்யாண கிருஷ்ணன்
, சனி, 25 ஜூன் 2016 (18:03 IST)
2015 ஜெயம் ரவியின் வெற்றியின் ஆண்டு. அவர் நடித்த மூன்று படங்களும் வெற்றி பெற்றன. அந்த இயக்குனர்களுக்குதான் அவர் அடுத்த வாயப்பையும் வழங்குவது என முடிவு செய்துள்ளார்.


 
 
ரோமியோ ஜுலியட் வெற்றிப்படத்தை தந்த லக்ஷ்மண் இயக்கத்தில் தற்போது போகன் படத்தில் ஜெயம் ரவி நடித்து வருகிறார். அடுத்து மிருதன் படத்தை இயக்கிய சக்தி சௌந்தர்ராஜன். சிவகார்த்திகேயன் படத்தை முடித்து மோகன்ராஜா வந்ததும் அவரது இயக்கத்தில் ஒரு படம்.
 
தயாராகி பல வருடங்கள் பெட்டிக்குள் இருந்தும் ஜெயம் ரவி நடித்த பூலோகம் முதலுக்கு மோசமில்லாமல் ஓடியது. அதனால், அப்பட இயக்குனர் கல்யாண கிருஷ்ணனையும்  தனது பட்டியலில் கொண்டு வந்துள்ளார் ஜெயம் ரவி. அவரும் ஜெயம் ரவிக்காக ஒரு கதை தயார் செய்து வருகிறார்.
 
ஜெயம் ரவியின் உதவி நல்லதுதான்... ஆனால்  இத்தனை பேர் படங்களில் நடிக்க இரண்டு மூன்று குளோனிங் தேவைப்படுமே.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ரோப்பில் தொங்கவிடப்பட்ட த்ரிஷா