Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

ரோப்பில் தொங்கவிடப்பட்ட த்ரிஷா

ரோப்பில் தொங்கவிடப்பட்ட த்ரிஷா

ரோப்பில் தொங்கவிடப்பட்ட த்ரிஷா
, சனி, 25 ஜூன் 2016 (17:31 IST)
பேய் படங்களில் பேயாக நடிப்பதில் பல அசௌகரியங்கள். முதலாவது மேக்கப் என்று பொங்கலுக்கு வெள்ளையடிப்பது போல் முகத்தை வெளுத்துவிடுவார்கள். இரண்டாவது ரோப்பில் தொங்கிக் கொண்டே நடிக்க வேண்டும்.


 
 
அரண்மனை 2 படத்திற்கு முன்புவரை த்ரிஷா மரங்களை சுற்றி டூயட் பாடி மகிழ்ச்சியாக இருந்தார். வெளிநாடு சென்றால் இன்னும் மகிழ்ச்சி. விதவிதமான ஆடைகளில் அழகழகான லொகேஷன்களில் அபிநயம் பிடித்தால் போதும். அரண்மனை 2 -க்குப் பிறகு எல்லாமே மாறிப் போனது.
 
அந்தப் படத்தில் ரோப்பில் கட்டி த்ரிஷாவை அந்தரத்தில் தொங்கவிட்டார்கள். அடுத்து நடித்த நாயகி படத்திலும் அந்தரத்தில்தான் பாதி நாளும். ராமோஜிராவ் பிலிம் சிட்டியில் கிட்டத்தட்ட பத்து தினங்களில் கயிற்றில் கட்டி தொங்கவிட்டு படமாக்கினார்களாம்.
 
இப்போது மோகினி படத்துக்காக லண்டன் சென்றிருக்கிறார். இங்கும் உயரமான கட்டிடத்தில்தான் த்ரிஷாவின் கதாபாத்திரம் உலவுகிறதாம்.
 
பேயாக நடிப்பது சும்மாயில்லை மக்களே.
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஷகிலாவின் சுயசரிதையில் இந்தி நடிகை