Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஜெயம் ரவி நடிப்பில் ‘டாடா’ இயக்குனர் கணேஷ் கே பாபு இயக்கும் படத்தின் ஷூட்டிங் எப்போது? வெளியான தகவல்!

vinoth
திங்கள், 9 டிசம்பர் 2024 (07:50 IST)
ஜெயம் ரவி நடிப்பில் அடுத்தடுத்து ஜீனி மற்றும் காதலிக்க நேரமில்லை ஆகிய படங்கள் ரிலிஸுக்குக் காத்திருக்கின்றன. இதற்கிடையில் அவரின் விவாகரத்து செய்தி வெளியாகி அவரைச் சுற்றி சர்ச்சைகள் எழுந்தன. சமீபத்தில் ரிலீஸான அவரின் பிரதர் திரைப்படம் மிக மோசமான விமர்சனங்களையும் வசூலையும் பெற்றது.

இந்நிலையில் தான் அக்டோபர் மாதம் ஜெயம் ரவியின் 34 ஆவது பட அப்டேட் வெளியானது. அதன்படி இந்த படத்தை ஸ்க்ரீன் சீன் நிறுவனம் தயாரிக்க, டாடா படத்தின் இயக்குனர் கணேஷ் கே பாபு இயக்கவுள்ளார். ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைக்கிறார்.

இந்நிலையில் இந்த படத்தின் ஷூட்டிங் சென்னையில் வரும் 16 ஆம் தேதி தொடங்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த படம் வடசென்னையை ஒட்டியக் கதைக்களமாக உருவாக்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. படத்தில் நடிக்கும் மற்ற நடிகர் நடிகைகள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்கள் பற்றிய விவரம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

சிவகார்த்திகேயனிடம் மன்னிப்பு கேட்ட அமீர்கான்.. என்ன காரணம்?

5 பிரபலங்கள் இருந்தும் மண்ணை கவ்விய ‘தக்லைஃப் வசூல்.. அதிர்ச்சி தகவல்..!

மாடர்ன் ட்ரஸ்ஸில் ஸ்டைலிஷான புகைப்படத் தொகுப்பை வெளியிட்ட லாஸ்லியா!

கிளாமர் லுக்கில் ஸ்ரேயாவின் அழகிய க்ளிக்ஸ்..!

சைலண்ட் ஹிட்டடித்த ‘லெவன்’ திரைப்படத்தின் ஓடிடி ரிலீஸ் அறிவிப்பு!

அடுத்த கட்டுரையில்
Show comments