Webdunia - Bharat's app for daily news and videos

Install App

“ஜெய்க்கும், எனக்கும் எந்தப் பிரச்னையும் இல்லை” - சுந்தர்.சி

Webdunia
வெள்ளி, 12 ஜனவரி 2018 (10:09 IST)
‘ஜெய்க்கும், எனக்கும் இடையில் எந்தப் பிரச்னையும் இல்லை’ என இயக்குநர் சுந்தர்.சி தெரிவித்துள்ளார்.
கடந்த சில நாட்களுக்கு முன்பு ‘பலூன்’ படத்தின் இயக்குநர் சினிஷ், ஜெய் மீது ஒரு குற்றச்சாட்டை வைத்தார். ‘பலூன்’  படப்பிடிப்புக்கு ஜெய் சரியாக வரவில்லை என்றும், அதனால் தயாரிப்பாளரின் பட்ஜெட்டை ஏற்றிவிட்டார் என்றும் சினிஷ்  கூறியிருந்தார்.
 
இந்நிலையில், நேற்று ‘கலகலப்பு 2’ படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு நடைபெற்றது. ஜெய் இந்தப் படத்தில் நடித்திருப்பதால், இதில் ஜெய்யுடன் ஏதாவது பிரச்னை ஏற்பட்டதா? என இயக்குநர் சுந்தர்.சி.யிடம் கேள்வி எழுப்பப்பட்டது.
 
“எனக்கும், ஜெய்க்கும் இடையில் எந்தப் பிரச்னையும் இல்லை. 7 மணிக்கு ஷூட்டிங் என்றால், 6.45 மணிக்கே மேக்கப்புடன்  ரெடியாக இருப்பார் ஜெய். இத்தனைக்கும் ஜெய்க்கும், ஜீவாவுக்கும் இடையில் ஏகப்பட்ட காம்பினேஷன் ஸீன்கள் இருந்தன. அதில் கூட எந்தப் பிரச்னையும் இல்லை” என சுந்தர்.சி தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

15 வருடத்தில் மூன்றே வெற்றி படங்கள் தான்.. என்ன ஆச்சு கமலுக்கு?

கலாச்சார சீர்ழிவா? கலாச்சார புரட்சியா? ‘தக்லைஃப்’ த்ரிஷா கேரக்டர் குறித்து நெட்டிசன்கள் ஆதங்கம்..!

ரொம்ப கேவலமா இருக்குது.. ‘தக்லைஃப்’ படத்தை வச்சு செஞ்ச பிரபல விமர்சகர்..!

கிளாமர் லுக்கில் கலக்கல் போஸ் கொடுத்த யாஷிகா ஆனந்த்!

ஹோம்லி லுக்கில் அழகு பதுமை ப்ரியங்கா மோகனின் க்யூட் க்ளிக்ஸ்!

அடுத்த கட்டுரையில்
Show comments