Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

'சர்கார்' படத்தின் கதை திருடப்பட்டதா?

Advertiesment
சர்கார்
, வெள்ளி, 19 அக்டோபர் 2018 (17:34 IST)
பெரிய நடிகர்களின் படங்கள் குறிப்பாக விஜய் படங்கள் பிரச்சனைகளை சந்திக்காமல் சமீபகாலமாக வெளியானதாக சரித்திரம் இல்லை. ஆரம்பத்தில் இருந்தோ அல்லது கடைசி நேரத்திலோ ஏதாவது ஒரு பிரச்சனை, வழக்கு என விஜய் படத்திற்கு தடை கேட்கும் வழக்கம் அதிகரித்து வருகிறது.

அந்த வகையில் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடித்து வரும் 'சர்கார்' திரைப்படம் வரும் தீபாவளி அன்று வெளியாகவுள்ளது. இந்த படம் ரிலீஸ் ஆவதற்கான அனைத்து பணிகளும் மும்முரமாக நடந்து வருகிறது.

webdunia
இந்த நிலையில் இந்த படத்தின் கதை வருண் ராஜேந்திரன் என்பவர் எழுதிய 'செங்கோல்' என்ற கதையின் காப்பி என்று தென்னிந்திய திரைக்கதை ஆசிரியர்களின் சங்கத்தில் புகார் அளிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. சர்கார் படத்தின் கதை அப்படியே இந்த 'செங்கோல்' கதையின் மறுவடிவமாக இருப்பதாகவும் இதுகுறித்து வழக்கு தொடரவும் வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது.  இந்த நிலையில் இன்னும் சற்று நேரத்தில் 'சர்கார்' படத்தின் டீசர் வெளியாகவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

2.0 அப்டேட்: ரஜினி ரசிகர்களை மகிழ வைத்த அறிவிப்பு