Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

உள்ளுக்குள்ள இருக்குற கொழந்த குதியாட்டம் போடுது…. செல்வராகவன் படம் பற்றி பேசிய நடிகை!

உள்ளுக்குள்ள இருக்குற கொழந்த குதியாட்டம் போடுது…. செல்வராகவன் படம் பற்றி பேசிய நடிகை!
, திங்கள், 18 ஏப்ரல் 2022 (10:56 IST)
செல்வராகவன் இயக்கத்தில் தனுஷ் உள்ளிட்ட பலர் நடிக்கும் நானே வருவேன் படத்தின் படப்பிடிப்பு முழுவதும் நிறைவடைந்துள்ளது.

தனுஷ் நடிப்பில் செல்வராகவன் இயக்கத்தில் உருவான நானே வருவேன் என்ற படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களுக்கு முன் தொடங்கியது என்பது தெரிந்ததே. இந்த நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து விட்டதாக தனுஷ் சமீபத்தில் தனது ட்விட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளார். இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார் என்றதும் கலைப்புலி எஸ் தாணு இந்த படத்தை தயாரித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் இந்த படத்தின் போஸ்ட் புரடொக்ஷன் பணிகள் இன்னும் ஒரு சில நாட்களில் தொடங்கும் என்றும் வரும் ஆகஸ்ட் அல்லது செப்டம்பர் மாதம் இந்த படத்தை வெளியிட படக்குழுவினர் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்த படத்தில் இரு கதாநாயகிகளில் ஒருவராக நடிகை இந்துஜா நடித்துள்ளார்.

செல்வராகவன் படத்தில் நடித்த அனுபவம் குறித்து பேசியுள்ள அவர் “ஒவ்வொரு முறையும் நான் செல்வராகவன் படத்தில் பணியாற்றிவிட்டேன் என நினைக்கும் போது எனக்குள் இருக்கும் குழந்தை ஆட்டம் போடுகிறது. மனதுக்கு நிறைவான அனுபவம். எப்பொதும் மரியாதைக்குரிய நபர்” எனக் கூறி அவருடன் இருக்கும் புகைப்படத்தையும் பகிர்ந்துள்ளார்.
webdunia

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

”நயன்தாராவோட பெஸ்ட் இதுவாதான் இருக்கும்”… புகழ்ந்து தள்ளிய சமந்தா!