Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

இன்று நேற்று நாளை படத்தின் இரண்டாம் பாகத்தில் இருந்து விலகிய விஷ்ணு விஷால்!

இன்று நேற்று நாளை படத்தின் இரண்டாம் பாகத்தில் இருந்து விலகிய விஷ்ணு விஷால்!
, வியாழன், 13 அக்டோபர் 2022 (16:10 IST)
ரவிக்குமார் இயக்கத்தில் விஷ்ணு விஷால், கருணாகரன் மற்றும் மியார் ஜார்ஜ் நடிப்பில் உருவான திரைப்படம் இன்று நேற்று நாளை. தமிழில் அதிகம் வராத டைம் டிராவல் வகையில் வந்து மிகப்பெரிய வெற்றி பெற்ற திரைப்படமாக அமைந்தது.

இந்நிலையில் அந்த படத்தின் பார்ட் 2 எடுக்க விரும்பிய தயாரிப்பாளர் சி வி குமார் இயக்குனர் ரவிக்குமாரை கதை, திரைக்கதை, வசனம் ஆகியவற்றை ஏற்றுக்கொள்ள சொன்னார். அவரின் இணை இயக்குனர் எஸ் பி கார்த்திக் அந்த படத்தை இயக்குவார் என்றும் அறிவிக்கப்பட்டு சில மாதங்களுக்கு முன்னர் பூஜை போடப்பட்டது. ஆனால் படப்பிடிப்பு இன்னும் தொடங்கவில்லை.

இந்நிலையில் விரைவில் இரண்டாம் பாகத்தின் ஷூட்டிங் தொடங்கும் என்று சொல்லப்படும் நிலையில் இந்த படத்தில் இருந்து நடிகர் விஷ்ணு விஷால் விலகியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஏற்கனவே அவர் ஒத்துகொண்ட படங்களில் நடித்து வருவதாலும், இந்த படத்துக்கான சம்பளப் பிரச்சனை காரணமாகவும், அவர் இந்த படத்தில் இருந்து விலகியுள்ளதாக சொல்லப்படுகிறது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

இயக்குனர் வெங்கட்பிரபு இயக்கத்தில் உருவாகும் படத்தில் சரத்குமார்!