Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

பொது மேடையில் கண்ணீர் விட்டு அழுத நடிகர் தாடிபாலாஜி

பொது மேடையில் கண்ணீர் விட்டு அழுத நடிகர் தாடிபாலாஜி
, வியாழன், 28 டிசம்பர் 2017 (11:01 IST)
நடிகர் தாடி பாலாஜி தனது மனைவியுடனான கருத்து வேறுபாட்டால் அவரை பிரிந்து வாழ்கிறார். சமீபத்தில் அவர் கலந்து கொண்ட பொது நிகழ்ச்சியில்  அழுதுள்ளார்.
நடிகர் தாடி பாலாஜி பல முன்னனி நடிகர்களுடன், நகைச்சுவை வேடங்களில் நடித்துள்ளார். சினிமாத் துறையில் பல வருடங்களாக இருந்து வரும் தாடி பாலாஜி, விஜய் டிவி நடத்தும் கலக்கப் போவது யாரு நிகழ்ச்சியில் நடுவராக இருந்து வருகிறார். இந்நிலையில் கடந்த சில மாதங்களாக தாடி பாலாஜிக்கும் அவரது மனைவி நித்யாவுக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது. பாலாஜி தம்மை அடித்து துன்புறுத்துவதாகவும், ஜாதி பெயரை சொல்லி கேவலப்படுத்துவதாகவும் நித்யா போலீஸில் புகார் அளித்தார். இதற்கு பதிலளிக்கும் வகையில் பேசிய பாலாஜி, தம் மனைவிக்கு வேறு ஒரு நபருடன் தொடர்பு இருப்பதாக தெரிவித்தார்.
 
இந்நிலையில் விஜய் டிவியில் குழந்தைகள் பங்குபெறும் கிங்ஸ் ஆப் காமெடி நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பாலாஜி குழந்தைகளின் செயல்திறனைக் கண்டு கண் கலங்கினார். இவர்களைப் பார்க்கும் போது, பிரிந்து சென்ற தனது மனைவியுடன் இருக்கும், தனது குழந்தையின் ஞாபகம் வந்ததால் அழ நேரிட்டது எனக் கூறினார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

லண்டனில் கார் ஓட்டி சாகசம் செய்த த்ரிஷா