Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

'பவன் 25' படத்தில் கீர்த்தி சுரேஷ், அனிருத் ஒப்பந்தம்!!

'பவன் 25' படத்தில் கீர்த்தி சுரேஷ், அனிருத் ஒப்பந்தம்!!
, வியாழன், 17 நவம்பர் 2016 (12:54 IST)
பவன் கல்யாணின் 25-வது படத்தில் நாயகியாக கீர்த்தி சுரேஷ் ஒப்பந்தமாகியிருக்கிறார். பிரபல இயக்குனர் த்ரிவிக்ரம் ஸ்ரீனிவாஸ் இயக்கத்தில் உருவாகியுள்ளது.


 


இந்நிலையில் இது குறித்த தகவல்கலை நடிகை கீர்த்தி தனது டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இந்த தெலுங்கு படத்தில் பவன் கல்யாணோடு நடிப்பதன் மூலம் தான் மகிழ்ச்சி அடைவதாகவும் தெரிவித்துள்ளார்.
 
ஏற்கனவே பவன் கல்யாண்-திரிவிக்ரம் கூட்டணியில், 'அத்தாரின்ட்டிகி தாரேதி', 'ஜால்சா' ஆகிய இரண்டு படங்களும் தெலுங்கு திரையுலகின் பாக்ஸ் ஆபிஸ் ஹிட் படங்களாக அமைந்தன. எனவே மூன்றாவதாக இருவரும் இணையும் இந்த படத்திற்கு கூடுதல் எதிர்பார்ப்பு உள்ளது. மேலும், இந்த படத்தின் மூலம் தமிழ் இசையமைப்பாளர் அனிருத் தெலுங்கு திரையுலகில் அறிமுகமாகவிருக்கிறார். 
 
இப்படத்தின் படப்பிடிப்புகள் வருகிற ஜனவரி மாதம் முதலில் தொடங்கும் என கூறப்படுகிறது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

'என்னை நோக்கி பாயும் தோட்டா' உருவான விதம்!!