Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

'என்னை நோக்கி பாயும் தோட்டா' உருவான விதம்!!

'என்னை நோக்கி பாயும் தோட்டா' உருவான விதம்!!
, வியாழன், 17 நவம்பர் 2016 (12:52 IST)
'அச்சம் என்பது மடமையடா' படத்தைத் தொடர்ந்து தனுஷை வைத்து 'என்னை நோக்கி பாயும் தோட்டா' படத்தை இயக்கி வருகிறார் கவுதம் மேனன்.


 
 
இப்படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பை விரைவில் துவங்கவிருக்கிறார்கள். மேகா ஆகாஷ் நாயகியாக நடித்துவரும் இப்படத்தின் வில்லன் மற்றும் இசையமைப்பாளர் ஆகிய விஷயங்களில் மட்டும் ரகசியம் காத்து வருகிறது படக்குழு.
 
ஆனால் தற்போது படம் உருவான விதம் குறித்து கெளதம் மேனன் கூறியுள்ளதாவது, 'என்னை நோக்கி பாயும் தோட்டா' திரைப்படம் 80% முடிந்து வைத்திருந்த கதை. என்னிடம் தனுஷும் 2017 இறுதியில் தான் தேதிகள் இருக்கிறது என்றார். பின்னர், இக்கதையை படித்துப் பாருங்கள், உங்களுக்குப் பிடித்திருந்தால் இக்கதையில் நான் கொஞ்சம் பணியாற்ற வேண்டும் என்றேன்.
 
கதையை படித்து முடித்தவுடன் "உடனே படப்பிடிப்புக்குப் போக முடியுமா?" என்று கேட்டார். அதில் நாயகன் வேடத்துக்கு தனுஷ் எப்படியிருப்பார் என்று சிறுசிறு சந்தேகங்கள் இருந்தது.
ஆனால் தனுஷின் நடிப்பை பார்த்து இவர் வேற லெவல் நடிகர் என்று முடிவு செய்துவிட்டேன் என தெரிவித்துள்ளார்.
 
ஒரு பெண்ணை ஒரு இடத்திலிருந்து காப்பாற்றி அழைத்து வர வேண்டும். பின்னர், ஒரு அண்ணன் கதாபாத்திரம் இருக்கும். இவர்கள் இருவரையும் தேடும் ஒரு பயணம் தான் 'என்னை நோக்கி பாயும் தோட்டா'." என்று கதையின் கருவை தெரிவித்துள்ளார் கவுதம்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ரூபாய் நோட்டுகள் தடையால் புதிய படங்கள் வாங்க வினியோகஸ்தர்கள் தயக்கம்!!